எல் டொராடோ எனும் தங்க நகரம் உண்மையில் இருந்ததா? - ஒரு சாகச பயணம்

எல் டோராடோ மூலக் கதையின் இரண்டாவது வகை 1541 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. வரலாற்றின் இந்த கட்டத்தில், ஸ்பானியர்கள் இன்னும் கண்டத்தின் பெரும்பகுதிக்குள் நுழையவில்லை.
கே.ஜி. எஃப் சொல்லும் எல் டொராடோ
கே.ஜி. எஃப் சொல்லும் எல் டொராடோ Facebook

எல் டோரோடோ தென் அமெரிக்காவில் இருந்ததாக கூறப்படும் ஒரு புராண நகரம். இது தங்கத்தால் நிறைந்த நகரமென்று 16 – 17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பேசப்பட்டது. எல் டொரோடோவின் இருப்பிடம் குறித்த ஆதாரங்கள், வதந்திகளும் சர்ச்சைகளும் நிறைந்தது.

அக்காலத்தில் தங்கம் உலகிலயே மிக உயர்ந்த மதிப்புள்ள (இன்றும்) பொருளாக கருதப்பட்டது. உலகின் பல இடங்களுக்கு சென்ற ஐரோப்பியர்கள் தேடிய பொருட்களில் தங்கமும் முக்கியமானது. 1969 இல் வெளி வந்த மெக்கான்ஸ் கோல்டு உட்பட பல ஹாலிவுட் படங்கள் இக்கருவை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன. பல நாவல்களும் வெளியாகியிருக்கின்றன.

அப்படி பல தங்க வேட்டைக்காரர்கள் எல் டொராடோவைத் தேடினர். ஆனால் அந்த இடம் எங்கே இருந்தது என்பது குறித்து பல கட்டுக்கதைகள் நிலவின.

சில கதைகளின் படி எல் டொராடோ ஒரு மனிதன், மற்றவற்றில் ஒரு ஏரி அல்லது பள்ளத்தாக்கு. 1835 வாக்கில், பிபிசியின் கூற்றுப்படி, எல் டொராடோவின் கட்டுக்கதை ஏற்கனவே மூன்று நூற்றாண்டுகள் பழமையானது.

Facebook

எல் டொராடோவின் தோற்றம்

1570களில் ஜூவான் டி காஸ்டெல்லானோஸ் எனும் பாதிரியார், தென் அமெரிக்காவில் ஸ்பானிஷ் வீரம் பற்றிய தனது வரலாற்றில் ஒரு பகுதியாக இந்த தங்க நகரத்தைச் சேர்த்தார்.

உலக வரலாற்று கலைக்களஞ்சியத்தின் படி, இக்கதை ஒரு பெரிய பீடபூமியில் வசித்த முயிஸ்கா பழங்குடி தலைவருடன் தொடர்புடையது.அந்த பீடபூமி குண்டினமார்கா என்று அறியப்பட்டது. இப்போது கொலம்பியாவில் உள்ள ஆண்டிஸின் கிழக்கு எல்லையில் உயரமான இடத்தில் இருந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை, தலைவன் தலை முதல் கால் வரை தங்கத்தால் தன்னை மூடிக்கொள்வான் என்று கதை கூறுகிறது. இங்கிருந்து "எல் டொராடோ" என்ற பெயர் வந்து, இது "தங்கம்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

காஸ்டெல்லானோஸின் கூற்றுப்படி, தலைவர் குவாடாவிடா ஏரியில் தங்கம் மற்றும் மரகதம் காணிக்கை செலுத்துவார். மக்கள் பாடுவார்கள். ஒரு திருவிழா தொடங்குவதற்கான அடையாளம் இது.

இந்த சடங்கை யாரும் பார்த்ததாக பதிவு இல்லை. ஸ்பானியர்கள் வருவதற்கு சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பு இது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கே.ஜி. எஃப் சொல்லும் எல் டொராடோ
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு!

மற்றொரு கதை

எல் டோராடோ மூலக் கதையின் இரண்டாவது வகை 1541 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. வரலாற்றின் இந்த கட்டத்தில், ஸ்பானியர்கள் இன்னும் கண்டத்தின் பெரும்பகுதிக்குள் நுழையவில்லை.

எல் டொராடோ தொன்மத்தின் 1541 கதை கோன்சலோ பெர்னாண்டஸ் டி ஓவிடோ என்ற வெற்றியாளரின் எழுத்துக்களில் காணப்படுகிறது. இக்கதை வடக்கு ஈக்வடாரில் உள்ள குய்டோவில் நடைபெறுகிறது. இந்த நேரத்தில், இன்காக்களின் நாகரீகம் அழந்து ஸ்பானியர்களின் ஒரு பகுதியாக இந்த பிரதேசம் கைப்பற்றப்பட்டது.

ஓவிடோவின் கூற்றுப்படி, எல் டோராடோ ஒரு "பெரும் பிரபு அல்லது மன்னர். அவர் தங்கத்தால் மூடப்பட்டிருக்கிறார். ஆனால் ஒருவரின் உடலை தங்கத்தால் ஆடையாக்குவது ஒரு அசாதாரணமான விஷயம், மற்றும் அதன் மதிப்பு அதிகம்."

கோன்சலேஸ் பிசாரோ
கோன்சலேஸ் பிசாரோ NewsSense

எல் டொராடோவை தேடி

பிப்ரவரி 1541 இல், மற்றொரு ஸ்பானிஷ் கோன்சலேஸ் பிசாரோ ஒரு சிறிய படையுடன், ஈக்வடாரின் குய்டோவிலிருந்து புராண மன்னர் எல் டொராடோவின் நிலத்தைத் தேடி புறப்பட்டார். அவரது சாகசக் கதையில், எல் டொராடோவை ஒரு ஏரி என்று விவரிக்கிறார், ஒரு மனிதர் அல்ல. மூன்றாவது சமகால ஆதாரம், வரலாற்றாசிரியர் Pedro de Cieza de León, எல் டொராடோவை ஒரு பள்ளத்தாக்கு என்று எழுதுகிறார்.

4,000 ஊழியர்களுடன் க்யூட்டோவிலிருந்து கிழக்கு நோக்கி பிசாரோ சென்றார். குதிரைகள், லாமாக்கள், சுமார் 2,000 பன்றிகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான வேட்டை நாய்களுடன் அவர் சென்றார்.

திறந்த நிலம், உழவு செய்யப்பட்ட வயல்வெளிகள், கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளிட்ட நாகரீகத்தை விரைவில் கண்டுபிடிப்பேன் என பிஸாரோ எதிர்பார்த்தார். மாறாக, மழைக்காலத்தில் மழைக்காடுகளின் இருளில், மலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகள் வழியாக வாரங்கள் மற்றும் மாதங்கள் அணிவகுத்துச் சென்றபோது, ​​அவர் எதையும் காணவில்லை. Cieza de Leon இன் வார்த்தைகளில் சொன்னால் கஷ்டம், பஞ்சம் மற்றும் துன்பத்தையே இப்படை அனுபவித்தது.

வழியில், பூர்வீக மக்கள் ஸ்பானியர்களால் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் பிசாரோ விரும்பிய பதில்களைக் கொண்டு வராததால், சித்திரவதை செய்யப்பட்டனர். ஆண்டின் இறுதியில் இந்த தேடுதல் அவநம்பிக்கையாக மாறியது. உணவுக்காக கொண்டு சென்ற 2000 பன்றிகளும் இறந்து போயின.

டிசம்பர், 1541 இல், பிசாரோவின் ஆட்களில் ஒருவரான ஃபிரான்சிஸ்கோ டி ஓரெல்லானா, படகில் ஐம்பது பேரை அழைத்துக் கொண்டு உணவு தேடித் திரும்புவதற்கு முன்வந்தார். ஆனால் அவர் திரும்பவில்லை.

அதற்குப் பதிலாக, ஒரெல்லானவும் அவரது ஆட்களும் அமேசான் ஆற்றைக் கண்டுபிடித்தனர். அதை அவர்கள் மரானோன் என்று அறிந்திருந்தனர். மேலும் அவர்கள் அதன் நீளத்தோடு மாதக்கணக்கில் பயணம் சென்று, ஆகஸ்ட் 26, 1542 அன்று அமேசான் ஆறு அட்லாண்டிக் கடலோடு சேரும் இடத்தை அடைந்தனர்.

பிசாரோ அதை தேசத்துரோகம் என்று அழைத்தார். அவர் எஞ்சியிருந்தவர்களோடு குயிட்டோவுக்குத் திரும்பினார். அவர்கள் தங்கள் நாய்களையும் குதிரைகளையும் தின்று, அவற்றின் சேணங்களையும், தோலையும் வேகவைத்து, சாப்பிட்டனர். எப்படியோ கஷ்டப்பட்டு ஜூன் மாதம் குய்டோவை அடைந்தனர்.

பூமத்திய ரேகைக்கு வடக்கே தென அமெரிக்காவில் எல் டொராடோ எனும் மர்மமான இடத்தில் தங்கத்தை தேடி எப்படி ஐரோப்பியர்கள் சாகசப் பயணத்தை மேற்கொண்டனர் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.

கே.ஜி. எஃப் சொல்லும் எல் டொராடோ
செளதி அரேபியா : விண்வெளித் துறையில் காலூன்றும் மத்திய கிழக்கு நாடுகள்

ஜெர்மன் வெற்றியாளர்கள்

எல் டொராடோவைக் கண்டுபிடிப்பதற்கான முதல் வெளிப்படையான முயற்சி பிசாரோவின் முயற்சியாகும். ஆனால் தங்க நிலத்தைப் பற்றிய கதைகள் பரவியவுடன், பலரும் அதைத் தேடத் தொடங்கினர்.

அப்படி தென் அமெரிக்காவிற்கு பெரும்பாலான பயணங்கள் தங்கப் புதையலைத் தேடித் தொடங்கியது.

தங்கம் தேடிய குழு ஒன்றில் டச்சு, ஃப்ளெமிங், ஜெர்மன், இத்தாலியன், அல்பேனியன், ஆங்கிலம், ஸ்காட்ஸ் மற்றும் பலர் அடக்கம். இவற்றில், 1530களில் சிலவற்றில், ஜெர்மானியர்கள் மிக முக்கியமானவர்களாக இருந்தனர்.

ஏனென்றால், 1528 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆண்ட ஜெர்மன் பேரரசர் ஐந்தாம் சார்லஸ், ஆக்ஸ்பர்க்கின் வெல்சர் வங்கிக் குடும்பத்திற்கு 143,000 ஃப்ளோரின்களுக்கு (அன்றைய நாணயம்) கடன்பட்டிருந்தார். பணம் செலுத்த முடியாததால், சார்லஸ் அவர்களுக்கு தென் அமெரிக்காவின் வெனிசுலா மாகாணத்திற்கு உரிமம் அளித்தார். அந்த மாகாணத்தில் புதையலோ அடிமைகளோ கிடைத்தால் அரசருக்கு 20% அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இது 1546 வரை தொடர்ந்தது.

இந்த காலகட்டத்தில் இப்பகுதியை கடக்கும் பல ஜேர்மன் தலைமையிலான பயணங்களில் ஃபெடர்மேன் மட்டுமே பல இடங்களுக்கு சிரமத்துடன் பயணம் செய்தார். மற்ற ஜெர்மன் சாகசக்காரர்களில் ஜார்ஜ் ஹோஹெர்முத் மற்றும் பிலிப் வான் ஹட்டன் ஆகியோர் அடங்குவர்.

அம்ப்ரோசியஸ் எஹிங்கரின் என்பவர் தனது பயணத்தில் 405 பவுண்டுகள் (184 கிலோகிராம்) தங்கத்தைச் சேகரித்தார். இது பெரும்பாலும் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வன்முறை மூலம் நடந்தது. இது எஹிங்கர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரின் உயிரையும் பறித்தது. தப்பிப் பிழைத்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெனிசுலாவின் தலைநகரான கோரோவுக்குத் திரும்பியபோது. ​​​​அவர்கள் புதையலை ஒரு மரத்தின் கீழ் புதைத்தாலும் அவர்கள் அதை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை.

கே.ஜி. எஃப் சொல்லும் எல் டொராடோ
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

தங்க வேட்டையின் விளைவுகள்

எல் டொராடோ எனும் தங்க இடத்தை தேடி ஐரோப்பியர்கள் மேற்கொண்ட பயணங்கள் சாகசங்களும், வன்முறையும் நிறைந்த ஒன்று. இதில் பலர் உயிரிழந்தனர். உள்ளூர் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் பறிக்கப்பட்டன. மறுபுறம் ஐரோப்பியர்கள் பல ஆறுகள், மலைகள், சமவெளிகளை கண்டுபிடித்தனர். பல பூர்வகுடி மக்களை கண்டனர். கிறித்தவ மதம் மாற்றுவதற்கு பாதிரியார்கள் வந்தனர். இறுதியில் தங்கம் கிடைத்ததோ இல்லை முழு தென்னமெரிக்க கண்டமும் குறிப்பாக ஸ்பானியர்களின் காலனியாக மாறுவதற்கு எல் டொராடோ வழி வகுத்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com