”இது வேற்றுகிரகம் இல்லை” இரவில் ஒளிரும் கடற்கரை - எங்கு இருக்கிறது? அறிவியல் காரணமென்ன?

நீண்ட காலமாக, இந்த தீவு மாலத்தீவின் சிறந்த ரகசியங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது இது மாலத்தீவில் பார்க்க மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
Maldives : Why Does Beach Glow At Night?
Maldives : Why Does Beach Glow At Night?Twitter

பரந்த, மர்மமான மற்றும் அறியப்படாத உயிரினங்கள் நிறைந்தது தான் கடல்.

ஒளியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பல கடல் விலங்குகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படி பல கடற்கரையின் அலைகள் நீல நிறத்தில் இரவில் ஒளிர்கின்றன. இதனை உயிரொளிர்தல் நிகழ்வு என்று கூறுகின்றனர்.

பிற நாடுகளில் உயிரொளிர்தல் நிகழ்வு அதிகமாக இருக்கும், ஆனால் கிழக்கு இந்தியாவில் கொல்கத்தாவிற்கு மிக அருகே உள்ள பிடர்கனிகா தேசிய பூங்காவில் உள்ள கடற்கரை, இவ்வளவு ஏன் சென்னையில் உள்ள கடற்கரையில் கூட இந்த உயிரொளிர்தல் நிகழ்வு நடந்திருக்கிறது.

மாலத்தீவின் வாதூ தீவில் இரவில் ஒளிரும் கடற்கரை உள்ளது உங்களுக்கு தெரியுமா? இவ்வாறு இரவில் கடற்கரை ஒளிர்வதற்கான காரணம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

வாதூ தீவு எங்கே உள்ளது?

மாலத்தீவில் உள்ள ரா அட்டோல் தீவுகளில் ஒன்றான வாதூ தீவின் ஒரு பகுதி கடற்கரையாக உள்ளது.

500 பேருக்கு மேல் இல்லாத ஒரு சிறிய தீவாக இருக்கும் வாதூ தீவு அதன் சீ ஆஃப் ஸ்டார்ஸ் நிகழ்வின் காரணமாக உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

நீண்ட காலமாக, இந்த தீவு மாலத்தீவின் சிறந்த ரகசியங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது இது மாலத்தீவில் பார்க்க மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஒளியின் பின்னால் உள்ள ரகசியம் என்ன?

இந்த ஒளிரும் கடற்கரைக்குப் பின்னால் பைட்டோபிளாங்க்டன் அல்லது பிளாங்க்டன் எனப்படும் நுண்ணுயிர்கள் ஈடுபட்டுள்ளதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

இருளில் ஒளிரும் இந்த ஒளியானது அடிப்படையில் ‘பயோலுமினென்சென்ஸ்’ எனப்படும் மிதவை உயிரிகளால் நடக்கக்கூடிய இயற்கையான நிகழ்வாகும். மிதவை உயிரிகள் என்பவை வேறொன்றும் இல்லை. அவை நம் கண்ணுக்குத் தெரியாத பாசி வகைகள்தான்.

இந்த மிதவை உயிரிகளில் சில ஒளிரும் தன்மை கொண்டவை. பாசிகளின் உள்ளே நிகழும் வேதியியல் மாற்றத்தால் ஒளி உண்டாகிறது. இந்த நீர்வாழ் நுண்ணுயிரிகள் கடலுக்கு அடியில் துடிப்பான நீல ஒளியை பரப்புகின்றன.

Maldives : Why Does Beach Glow At Night?
மாலத்தீவு : இந்த தீவு தேசத்திற்கு செல்வதை ஏன் மிஸ் பண்ணக்கூடாது? - தெரியாத 7 விஷயங்கள்

வாதூ தீவு எப்படி செல்வது?

மாலத்தீவின் தலைநகரம் மாலேவிலிருந்து 8 கிமீ தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு வேகப் படகு உள்ளது. இதனை அவர்கள் வாடகைக்கு எடுக்கலாம், தீவை அடைய இதற்கு சுமார் 15 நிமிடங்களாகும்.

மாலத்தீவில் உள்ள வாதூ தீவு அதன் ஒளி ஊடுருவக்கூடிய நீரால் ஒரு முழுமையான சொர்க்கமாக காட்சியளிக்கிறது.

ஒவ்வொரு ஆஃப்பீட் பயணிகளின் பக்கெட் லிஸ்ட்டிலும் இருக்க வேண்டிய அனுபவம் இது!

Maldives : Why Does Beach Glow At Night?
மாலத்தீவு : தீவு தேசத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட நகரம் - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com