1.3 கோடி ரூபாய் எடுத்துகொண்டு காதலனுடன் சென்ற மனைவி, ஷாக்கான கணவர்! என்ன நடந்தது?

அதிர்ச்சியடைந்த மனித் இது குறித்து காவல் துறையினரிடம் புகாரளித்தார். ஆனால், போலீசார் இந்த புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.
1.3 கோடி ரூபாய் எடுத்துகொண்டு காதலனுடன் சென்ற மனைவி, ஷாக்கான கணவர்!
1.3 கோடி ரூபாய் எடுத்துகொண்டு காதலனுடன் சென்ற மனைவி, ஷாக்கான கணவர்! Twitter
Published on

லாட்டரியில் வென்ற பணத்தை எடுத்துக்கொண்டு மனித் என்பவரின் மனைவி தன் காதலனுடன் வீட்டை விட்டு சென்ற சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

மனித் சமீபத்தில் லாட்டரி மூலம் ரூ.1.3 கோடி ரூபாய் வென்றுள்ளார். இதில் ஒரு பகுதியை கோவிலுக்கு நன்கொடையாக தர முடிவெடுத்தார். மீதம் இருக்கும் பணத்தை தன் குடும்பத்தாருடன் பகிர அவர் திட்டமிட்டிருந்தார்.

இதற்காக ஒரு நிகழ்ச்சியையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் முகம் தெரியாத நபர் ஒருவரை கவனித்த மனித், தன் மனைவியிடம் அழைத்து, அது யார்? என்று கேட்டுள்ளார். அப்போது அவரும் நம் உறவினர்களில் ஒருவர் என கூறியுள்ளார் மனைவி அங்கனாராத்.

ஆனால், பின்னர் தான் அந்த முகம் தெரியாத நபர் அங்கனாராத்தின் காதலர் என்றும், அந்த பெண் மனித் லாட்டரியில் வென்ற ரூ 1.3 கோடி ரூபாயையும் எடுத்து சென்றதும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மனித் இது குறித்து காவல் துறையினரிடம் புகாரளித்தார். ஆனால், போலீசார் இந்த புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

1.3 கோடி ரூபாய் எடுத்துகொண்டு காதலனுடன் சென்ற மனைவி, ஷாக்கான கணவர்!
”என் கணவர் ஏமாற்றிவிட்டார்” - பொம்மையை திருமணம் செய்த பெண் பகீர் புகார்

காரணம், மனித் மற்றும் அவரது மனைவி அங்கனாராத் இருவருக்கும் திருமணமாகி 26 ஆண்டுகள் முடிந்துள்ளபோதிலும், அங்கனாராத் இதுவரை திருமண சான்றிதழில் கையெழுத்து போடாமல் இருந்துள்ளார். மனித் அங்கனாராத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மனித், தன் மனைவிக்கும் அவருக்குமான உறவில் எந்த பிரச்னையும் இருந்ததாக தனக்கு இதுவரை தெரியவில்லை எனக் கூறிய நிலையில், தன் தாயின் காதலை குறித்து முன்பே அறிந்திருந்ததாக அவரது மகன் கூறியிருந்தார்.

இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக மனித் தொலைத்த பணத்தை தங்களால் மீட்டு கொடுக்க முடியாது என்று போலீசார் கைவிரித்துவிட்டனர். இந்நிலையில், தான் தொலைத்த பணத்தை மீட்டு தர, தாய்லாந்து ஊடகங்களிடம் உதவி கேட்டுள்ளார் மனித்

1.3 கோடி ரூபாய் எடுத்துகொண்டு காதலனுடன் சென்ற மனைவி, ஷாக்கான கணவர்!
"ரகசியமானது காதல்" காதலியை பார்க்க புர்கா அணிந்து சென்ற காதலன் கைது - ஒரு கலாட்டா சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com