ஸ்பெயின் : 300க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகுகள் மாயம் - என்ன நடந்தது?

கடந்த ஆண்டு ஸ்பெயின் தீவுகளுக்குச் செல்ல முயன்ற 559 பேர் கடலில் பயணம் செய்த போது இதே போல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச குடியேற்றத்துக்கான பிரிவு (IOM) தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் : 300க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகுகள் மாயம் - என்ன நடக்கிறது?
ஸ்பெயின் : 300க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகுகள் மாயம் - என்ன நடக்கிறது?Twitter
Published on

அட்லாண்டிக் பெருங்கடலில் 300 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற மூன்று படகுகள் திடீரென காணாமல் போயுள்ளதாக உதவிக் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

15 நாட்களுக்கு முன்பு செனகலில் இருந்து ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளை நோக்கி படகுகள் புறப்பட்டதாக ஸ்பெயின் நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒரு படகில் 200 புலம்பெயர்ந்தோர் இருந்தனர், மற்ற இரண்டு படகுகளில், ஒன்றில் 65 பேர் பயணம் செய்ததாகவும், மற்றொரு படகில் 60 பேர் பயணம் செய்ததாகவும், 'வாக்கிங் பார்டர்ஸ்' அமைப்பை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், கடலில் மாயமானவர்களின் மொத்த எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருக்கும்.

மத்திய தரைக்கடலில் கிரீஸ் கடற்கரைக்கு அருகே, ஐரோப்பாவின் மிக மோசமான விபத்து என கருதப்படும் அளவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு இழுவைப் படகு தண்ணீரில் மூழ்கியது.

அந்த இழுவைப் படகு தண்ணீரில் மூழ்கியதில் குறைந்தது 78 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 500 பேர் என்ன ஆனார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாத நிலை இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் : 300க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகுகள் மாயம் - என்ன நடக்கிறது?
ஆயிரம் பேரை பலி வாங்கிய டைட்டானிக் கப்பல் - அறியப்படாத ரகசியங்கள் என்ன?

இந்த விபத்துக்குப் பின்னர் தற்போது 200 பேருடன் சென்ற படகு கடலில் மாயமாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு பயணம் செய்வது புலம்பெயர்ந்தோருக்கு மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு ஸ்பெயின் தீவுகளுக்குச் செல்ல முயன்ற 559 பேர் கடலில் பயணம் செய்த போது இதே போல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச குடியேற்றத்துக்கான பிரிவு (IOM) தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டில் இப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,126 பேர்.

2022 இல் 15,682 பேர் இதுபோல் பயணம் செய்து கேனரி தீவுகளுக்கு வந்ததாக ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி IOM கூறுகிறது.

தற்போது 200 பேருடன் சென்ற படகு கடலில் மாயமான நிலையில் ஸ்பெயின் நாட்டின் மீட்புக் குழுவினர் அந்தப் படகை கேனரி தீவுகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் தேடிவருகின்றனர்.

ஸ்பெயின் : 300க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகுகள் மாயம் - என்ன நடக்கிறது?
டைட்டன் நீர்மூழ்கி வெடிப்பு: முன்னரே கணித்த டைட்டானிக் பட இயக்குநர் கேமரூன் - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com