பணி நீக்கம் செய்த நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் செலுத்திய பெண் - இது தான் காரணமா?

ஊழியர்களின் பணி நேரத்தை கணக்கிட டைம்கேம் என்ற செயலியை பயன்படுத்தியுள்ளது நிறுவனம். அதன் தரவுகள் கனக்கிடப்பட்ட நிலையில், கார்லி, சுமார் 50 மணி நேரம் வேலை செய்யாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
பணி நீக்கம் செய்த நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் செலுத்திய பெண் - இது தான் காரணமா?
பணி நீக்கம் செய்த நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் செலுத்திய பெண் - இது தான் காரணமா?canva
Published on

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்துகொண்டே பணியாற்றியபோது, சுமார் 50 மணி நேரம் நிறுவனத்தின் நேரத்தை வீணடித்ததற்காக கனடாவை சேர்ந்த பெண்ணுக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த கார்லி பெஸ்ஸி என்ற பெண் ரீச் சி பி ஏ என்ற நிறுவனத்தில் கணக்கராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரை திடீரென பணியிலிருந்து நீக்கியது அவரது நிறுவனம்.

பணி நீக்கம் செய்த நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் செலுத்திய பெண் - இது தான் காரணமா?
வீட்டில் வைத்த பின்ங் நிற கதவு : இளம் பெண்ணுக்கு ரூ.19 லட்சம் அபராதம் - என்ன காரணம்?

காரணமின்றியும் முன்னறிவிப்பின்றியும் தன்னை வேலையிலிருந்து நீக்கியதால், நிறுவனம் அவருக்கு 5000 கனடியன் டாலர்கள் ( 3.03 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்கவேண்டும் என அவர் வழக்கு தொடுத்தார்.

இதற்கு பதிலடியாக ரீச் சி பி ஏ நிறுவனம் அந்த ஊழியர் மீது வழக்கு தொடுத்தது. என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, நிறுவனத்தின் நேரத்தை அந்த பெண் வீணடித்தார் எனக் கூறப்பட்டது.

கொரோனா காலக்கட்டத்தில், ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி உலக நிறுவனகள் அறிவித்திருந்தது நாம் அறிந்ததே. இந்த புதிய மாற்றத்திற்காக தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.

ஊழியர்களின் பணி நேரத்தை கணக்கிட டைம்கேம் என்ற செயலியை பயன்படுத்தியுள்ளது நிறுவனம். அதன் தரவுகள் கனக்கிடப்பட்ட நிலையில், கார்லி, சுமார் 50 மணி நேரம் வேலை செய்யாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால், நிறுவனத்திற்கு தான் இழப்பு ஏற்பட்டது எனவும், அந்த ஊழியரை இதற்கு மேல் பணியில் வைத்திருக்க முடியாது என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், நிறுவனத்திற்கு அந்த பெண் 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த பெண்ணோ, செயலி சரியாக வேலை செய்யவில்லை எனவும், தனது வேலை நேரத்தையும், பர்சனல் நேரத்தையும் வேறுபடுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பணி நீக்கம் செய்த நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் செலுத்திய பெண் - இது தான் காரணமா?
லீவு நாளீல் ஆஃபிஸ்லேர்ந்து Call பண்ணினா ஒரு லட்சம் Fine - இந்தியாவில் ஓர் அடடே நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com