வீட்டில் வைத்த பின்ங் நிற கதவு : இளம் பெண்ணுக்கு ரூ.19 லட்சம் அபராதம் - என்ன காரணம்?

இதன்படி அந்த வீட்டை புரனமைத்து, பெயிண்ட் எல்லாம் அடித்து மிராண்டா டிக்சன் குடும்பம் அங்கு குடியேறியது. எடின்பர்க் நகர கவுன்சில் மிராண்டாவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது.
This lady is facing a Rs 19 lakh fine for a single pink door in her house
This lady is facing a Rs 19 lakh fine for a single pink door in her house Twitter
Published on

48 வயதான மிராண்டா டிக்சன் என்ற பெண்மணி தனது வீட்டின் கதவுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசியதற்காக ரூ.19 லட்சம் அபராதம் செலுத்தவுள்ளார். எதற்காக இந்த அபராதம்? வாங்க பார்க்கலாம்...

ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பரோவின் நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் மிராண்டா டிக்சன்.

48 வயதான இவர் தற்போது தனது பரம்பரை வீட்டில் வசித்து வருகிறார். 1981 ஆம் ஆண்டு இவரது பெற்றோரால் இந்த வீடு வாங்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே இரண்டு பிள்ளைகளின் தாயான மிராண்டாவின் பெற்றோர் மரணமடைந்த பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த வீட்டை புதுப்பிக்க நினைத்துள்ளார்.

இதன்படி அந்த வீட்டை புரனமைத்து, பெயிண்ட் எல்லாம் அடித்து மிராண்டா டிக்சன் குடும்பம் அங்கு குடியேறியது. எடின்பர்க் நகர கவுன்சில் மிராண்டாவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், நகரத்தின் பாரம்பரிய முறைகளுக்கு எதிராக வீட்டின் முன்பக்க கதவுகளுக்கு பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. விதிமுறைகளின்படி வீட்டின் கதவு அடர் நிறத்தில் இருக்க வேண்டும்.

This lady is facing a Rs 19 lakh fine for a single pink door in her house
ஆசையாக கட்டிய வீடு; இடிக்க சொன்ன அரசு - வீட்டை காப்பாற்ற விவசாயி செய்த செயல்!

மேலும், உலக பாரம்பரிய இடமாக திகழும் பகுதியின் விதிமுறைகளை மிராண்டா மீறியதாக கூறி 20 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 19 லட்ச ரூபாய்) அபராதமும் விதித்திருக்கிறது அமலாக்கத்துறை.

இந்த வீடு எடின்பர்க் நியூ டவுனின் உலக பாரம்பரியப் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள சொத்துக்களில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதில் சில விதிகள் உள்ளன.

எடின்பரோவின் பழைய மற்றும் புதிய நகரங்கள் 1995 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றன.

இது குறித்து மிராண்டா டிக்சன் கூறுகையில்

தனது வீட்டிலிருந்து ஒரு "ஐந்து நிமிட" நடைப்பயணத்தில் அக்கம்பக்கத்தில் இருக்கும் வீடுகள் மட்டும் பிரகாசமாக வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.

இதில் கசப்பான விஷயம் என்னவென்றால், அந்தப் பகுதியில் உள்ள மற்ற கதவுகளைப் பற்றி நான் அந்த அமைப்பிடம் கேட்டபோது, ​​புகார் வந்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள், என்று மிராண்டா கூறினார்.

This lady is facing a Rs 19 lakh fine for a single pink door in her house
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com