சவுதி அரேபியா: ஷெய்பரா தீவில் உருவாகும் மிதக்கும் அறைகள்; உலகின் அதிநவீன ஹோட்டல் - படங்கள்

அறைகள் வானத்தையும் கடலையும் பிரதிபலிக்கும் விதமாக நீரில் மிதந்துகொண்டு இருக்கும். இந்த தெளிவான தண்ணீரின் வழியாக கீழே இருக்கும் பவளப்பாறைகளைக் கூட பார்க்க முடியும்.
சவுதி அரேபியா: ஷெய்பரா தீவில் உருவாகும் மிதக்கும் அறைகள்; உலகின் அதிநவீன ஹோட்டல் - படங்கள்
சவுதி அரேபியா: ஷெய்பரா தீவில் உருவாகும் மிதக்கும் அறைகள்; உலகின் அதிநவீன ஹோட்டல் - படங்கள்Twitter
Published on

உலகின் அதிநவீன ஹோட்டலாக சவுதி அரேபியாவில் உருவாகிவரும் ஷெய்பரா விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஷெய்பரா தீவில் அமைக்கப்பட்டு வரும் இந்த விடுதி 2024ம் ஆண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவு சவுதி அரேபியாவிலிருந்து 45 நிமிடங்கள் படகில் பயணம் செய்யும் தூரத்தில் அமைந்துள்ளது.

பிரம்மாண்ட விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன. இந்த அற்புதமான வடிவமைப்பை கில்லா டிசைன் என்ற கம்பனி உருவாக்கியுள்ளந்து.

இந்த புகைப்படங்கள் வைரலாக காரணம் இதிலிருக்கும் உருண்டையான அறைகள் தான்.

அவை வானத்தையும் கடலையும் பிரதிபலிக்கும் விதமாக நீரில் மிதந்துகொண்டு இருக்கும்.

இந்த தெளிவான தண்ணீரின் வழியாக கீழே இருக்கும் பவளப்பாறைகளைக் கூட பார்க்க முடியும்.

இதன் மூலம் இங்கு தங்குபவர்கள் இயற்கைக்கு மிக நெருக்கமாக உணருவார்கள் என்கின்றனர்.

இந்த தீவு அடர்த்தியான சதுப்புநிலங்கள், பாலைவன தாவரங்கள், வெள்ளை மணல் திட்டுகள் கடற்கரைகள் மற்றும் பவளப்பாறைகள் என இயற்கை வளம் மிகுந்த காட்சிகளை வழங்குகிறது.

இந்த விடுதியில் 140 பேர் வரை தங்க வசதிகள் செய்துகொடுக்கப்படுகிறது. இதற்காக 260 வேலையாட்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

சுற்றுபுறத்துக்கு மாசு உண்டாக்காமல் இருக்கும் படி இந்த விடுதி தனக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின் சக்தி மூலம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும் உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தேவையான நீரை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சவுதி அரேபியா: ஷெய்பரா தீவில் உருவாகும் மிதக்கும் அறைகள்; உலகின் அதிநவீன ஹோட்டல் - படங்கள்
சவுதி அரேபியா : காதலியுடன் லிவ்-இன் உறவில் வாழும் ரொனால்டோ - சட்டத்தை மீறியதற்கு தண்டனையா?

எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவுதி அரேபியா தொடர்ந்து சுற்றுலாத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறது.

நியோம் நகரம், இரட்டை கண்ணாடி கட்டடங்கள், செங்கடல் திட்டம் என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது சவுதி.

சவுதி விசன் 2030 என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த திட்டங்களில் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.

சவுதி அரேபியா: ஷெய்பரா தீவில் உருவாகும் மிதக்கும் அறைகள்; உலகின் அதிநவீன ஹோட்டல் - படங்கள்
செளதி அரேபியா : ஓர் அட்டகாச நகரத்தை உருவாக்கும் இளவரசர் முகமது பின் சல்மான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com