Twitter : 12 மணிநேர வேலை; அலுவலகத்திலேயே உறங்கும் ஊழியர்- சர்ச்சையான புகைப்படம்

இவரது தலைமையில் டிவிட்டர் நிறுவனத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அதன் ஊழியர்களுக்கு நன்மை பயக்குமா என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
அலுவலகத்தில் படுத்து உறங்கும் டிவிட்டர் ஊழியர்
அலுவலகத்தில் படுத்து உறங்கும் டிவிட்டர் ஊழியர் டிவிட்டர்
Published on

டிவிட்டர் அலுவலகத்திலேயே ஊழியர் ஒருவர் படுத்து உறங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கினார்.

இவர் டிவிட்டரை வாங்குவதாக செய்திகள் வெளியானதிலிருந்து சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. பல குழப்பங்களுக்கு பிறகு டிவிட்டரை சொந்தமாக்கிய மஸ்க், முதல் நாளிலேயே முன்னாள் CEP-வான பராக் அகர்வால் மற்றும் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளை நீக்கினார்.

அலுவலகத்தில் படுத்து உறங்கும் டிவிட்டர் ஊழியர்
Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா?

இவரது தலைமையில் டிவிட்டர் நிறுவனத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அதன் ஊழியர்களுக்கு நன்மை பயக்குமா என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. 

நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே படுத்து உறங்கும் புகைப்படம் இணையத்தில் சர்ச்சையாகியுள்ளது. எஸ்தர் க்ராஃபோர்ட் என்பவர் தான் படுத்துக்கொண்டிருந்தவர். அவருக்கு கீழ் பணிபுரியும் எவான் என்பவர் தான் அந்த புகைப்படத்தை எடுத்து பகிர்ந்திருந்தார்.

டிவிட்டரில், "எலானின் டிவிட்டரில் உங்கள் பாசிடம் எதாவது வேண்டுமென்றால்" என ட்வீட் செய்திருந்தார். பின்னர் அதை ரீட்வீட் செய்து, உங்கள் டீம் டெட்லைனை முடிக்க  24 மணி நேரமும்  உங்களை துரத்தும்போது, #SleepWhereYouWork" என்று பகிர்ந்தார். 

இணையவாசிகள் இந்த புகைப்படத்தை பார்த்து எலான் மஸ்க் தான் இந்த நிலைக்கு காரணம் என கருத்துகள் தெரிவித்தனர். அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக  எவான், "உலகெங்கிலும் பணிபுரியும் எனது சக ஊழியர்கள், மாற்றங்களை ஏற்படுத்த பல முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அவர்களது முயற்சியில் நானும் உடன் இருப்பதை காட்டுவது முக்கியம்" என் தெரிவித்தார். 

இருப்பினும் டிவிட்டர் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சற்று கவலைக்கொள்ளும் விதமாகவே இருக்கிறது. ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விகிதம், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும். அப்போது தான் மஸ்க் குறித்துள்ள இலக்குகளை அடைய முடியும். மஸ்க் அறிவித்துள்ள இலக்குகளை முடிக்க தவறுபவர்கள் வேலை நீக்கம் கூட செய்யப்படலாம் என சிஎன்பிசி தளம் தெரிவிக்கிறது. 

எலான் மஸ்க் டிவிட்டரில் நீல நிற டிக் பெற ஒரு நபர் மாதத்திற்கு 8 டாலர் பணம் செலுத்தவேண்டும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

அலுவலகத்தில் படுத்து உறங்கும் டிவிட்டர் ஊழியர்
Twitter Blue Tick பெறுவதற்கு கட்டணம்- ஸ்டீவ் ஜாப்ஸ் பாணியில் செயல்படும் எலான் மஸ்க்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com