"தமிழர்களை கொன்று அழிப்பேன்" - புத்த பிக்கு பேச்சும், பின்னணியும்!

மட்டகளப்பு பகுதி நிர்வாகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர் எனக் கருதப்படுகிறது. அந்த மாவட்டத்தின் அரசியல்வாதிகள் சிங்களவர்களின் அடையாளங்களை அழிப்பதாக மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
"தமிழர்களை கொன்று அழிப்பேன்" - புத்த பிக்கு பேச்சும், பின்னணியும்!
"தமிழர்களை கொன்று அழிப்பேன்" - புத்த பிக்கு பேச்சும், பின்னணியும்!Twitter
Published on

இலங்கை மட்டகளப்பு பகுதியில்  மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் என்ற புத்த பிக்கு, "தமிழர்களை ஒட்டுமொத்தமாக கொன்று அழிப்பேன்" என இனவெறியுடன் பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் பேசும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அவரது இனவாதத்தை தூண்டும் பேச்சுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றனர்.

மட்டகளப்பு களியன்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக அந்த புத்த பிக்கு குற்றம்சாட்டுகிறார்.

மட்டகளப்பு பகுதி நிர்வாகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர் எனக் கருதப்படுகிறது. அந்த மாவட்டத்தின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், சாணக்கியம் போன்ற அரசியல்வாதிகள் சிங்களவர்களின் அடையாளங்களை அழிப்பதாக மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

தனது தாயின் கல்லறை இருந்த இடத்துக்கு சென்ற அவர் தமிழர்களுக்கு எதிராக அவர் பேசிய கருத்துக்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை தமிழ்மக்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

"தமிழர்களை கொன்று அழிப்பேன்" - புத்த பிக்கு பேச்சும், பின்னணியும்!
இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்சே - மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா?

புத்த பிக்குவின் கருத்துக்கு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து தொடர்ச்சியாக கருத்து தெரிவிப்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

புத்த புக்கு மீண்டும் இனவாதத்தை தூண்டியிருப்பதாகவும், நடுத்தெருவில் தமிழர்களை வெட்ட வேண்டும் கொல்ல வேண்டும் எனப் பேசுவது என்ன மன நோயா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது. அனைவரும் இணைந்து நாட்டை கட்டிஎழுப்ப வேண்டிய சூழலில் இதுபோன்ற பிளவுப்படுத்தும் கருத்துக்கள் ஆபத்தானது எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

"தமிழர்களை கொன்று அழிப்பேன்" - புத்த பிக்கு பேச்சும், பின்னணியும்!
ஈரான் முதல் இலங்கை வரை : பெயரை மாற்றிகொண்ட நாடுகள் - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com