இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்

இரண்டாவது திருமணம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பெண், அடுத்தவரின் மனைவியாக இருக்கவேண்டும். மணமகன்கள், தங்களின் திறனை வைத்து அடுத்தவரின் மனைவியை கவர வேண்டும். அவர் கவரப்பட்டால் திருமணம் செய்துகொள்கின்றனர்.
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்twitter

அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்யும் வினோத சடங்கு ஒன்று ஆப்பிரிக்காவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

உலகெங்கிலும் திருமணங்கள் பல வகைகளாக செய்யப்படுகிறது. ஒரு இடத்தில், அல்லது ஒரு இனத்தவர் பின்பற்றும் சடங்குகளும் மரபுகளும் மற்றொரு இடத்தில் நாம் பார்ப்பது அரிதே.

இவற்றில் சில சடங்குகள் விசித்திரமானதாக இருக்கும்.

எச்சில் துப்புவது, திருமணத்திற்கு முன் ஒரு நாள் ஒதுக்கி அழுவது, மணமகனின் காலணியை ஒளித்து வைப்பது போன்ற சடங்குகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இங்கும் அப்படி வித்தியாசமான சடங்கு ஒன்று பின்பற்றப்படுகிறது. அடுத்தவரின் மனைவியை தன்வசப்படுத்தி திருமணம் செய்துகொள்வது தான் அந்த சடங்கு.

மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வொடாபே. இவர்கள் வழக்கத்தில் ஒருவர் ஒரு திருமணத்திற்கு மேல் செய்துகொள்ளலாம்.

முதல் திருமணம், குடும்பத்தாரின் விருப்பப்படி நடக்கிறது. அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் வேளையில் இவர்களாகவே பெண்ணை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஆனால் அதிலும் ஒரு கெடுபிடி உள்ளது

இரண்டாவது திருமணம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பெண், அடுத்தவரின் மனைவியாக இருக்கவேண்டும். மணமகன்கள், தங்களின் திறனை வைத்து அடுத்தவரின் மனைவியை கவர வேண்டும். அவர் கவரப்பட்டால் திருமணம் செய்துகொள்கின்றனர்.

ஒருவேளை அந்த ஆண் அடுத்தவரின் மனைவியை தேர்ந்தெடுக்க மறுத்தால், இரண்டாவது திருமணம் செய்ய இவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கட்டாயத்தின் அடிப்படையில் மற்றவர் மனைவியை இவர்கள் தேர்வு செய்தே ஆக வேண்டும்

இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்
ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா?

ஆண்டுதோறும் கரெவோல் என்ற ஒரு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் இளைஞர்கள் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு, மற்றவரின் மனைவியை ஈர்க்க முயற்சிகள் செய்வார்கள். நடனமாடுவது, சாகசங்கள் செய்வது போன்ற செயல்களால் பெண்களை கவர நினைப்பார்கள்.

இந்த முயற்சிகளை ஆண்கள் மேற்கொள்ளும்போது, பெண்கள் அவர்கள் கணவர்களுக்கு இது தெரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு வேளை அவர்களின் மனைவி வேறொரு ஆணால் கவரப்பட்டு ஓடிப்போய்விட்டால், அவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு குடும்பத்தார் திருமணம் செய்து வைக்கின்றனர். இது அவர்கள் வழக்கத்தில் காதல் திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இங்கு மற்றொரு வினோத வழக்கமும் உள்ளது. பெற்றோர் தங்களுக்கு பிறந்த முதல் இரண்டு குழந்தைகளுடன் பேச கூடாது. அவர்களை பாட்டி தாத்தா தான் பராமரித்து வளர்ப்பார்கள்.

அதே போல கணவனும் மனைவியும் பகலில் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள அனுமதி இல்லை

இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்
அழுகை சடங்கு முதல் எச்சில் துப்புவது வரை - உலகின் வித்தியாசமான திருமண கலாச்சாரங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com