கூகுள்: 25 ஆண்டுகளுக்கு முன் தந்தைக்கு ஈமெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை - நெகிழ்ச்சி கதை!

கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சை, தன் தந்தையுடன் ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சிகர அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அது பின்னர் எப்படி நகைச்சுவையான ஒன்றாக மாறியது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
கூகுள்: 25 ஆண்டுகளுக்கு முன் தந்தைக்கு ஈமெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை - நெகிழ்ச்சி கதை!
கூகுள்: 25 ஆண்டுகளுக்கு முன் தந்தைக்கு ஈமெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை - நெகிழ்ச்சி கதை!Canva

25 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தைக்கு அனுப்பிய முதல் ஈமெயில் குறித்து நினைவுக்கூர்ந்துள்ளார் கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை.

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி, 25வது ஆண்டு விழாவை கொண்டாடியது கூகுள் நிறுவனம். அதில் பங்கேற்றிருந்த கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சை, தன் தந்தையுடன் ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சிகர அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.

அது பின்னர் எப்படி நகைச்சுவையான ஒன்றாக மாறியது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்

பல ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தர் பிச்சை அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும்போது தான் அவரது தந்தைக்கு முதல் மின்னஞ்சல் முகவரி கிடைத்துள்ளது.

“இனி என் தந்தையுடன் எவ்வளவு வேண்டுமானாலும் உரையாடலாம் என்று நான் உற்சாகமாக இருந்தேன். இதனால் அவருக்கு என் முதல் ஈமெயிலை அனுப்பினேன்”

தந்தையிடம் இருந்து பதில் வரும் என்று காத்திருந்தார் சுந்தர் பிச்சை. ஆனால் இரண்டு நாட்களுக்கு காத்திருந்த பிறகே பதில் கிடைத்துள்ளது. அதுவும்,

“டியர் மிஸ்டர் பிச்சை, இமெயில் வந்து சேர்ந்தது. அனைத்தும் நன்றாக உள்ளது” என்று ஃபார்மலாக ஏதோ மூன்றாவது நபர் போல பதிலளித்தார் சுந்தர் பிச்சையின் தந்தை.

கூகுள்: 25 ஆண்டுகளுக்கு முன் தந்தைக்கு ஈமெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை - நெகிழ்ச்சி கதை!
சுந்தர் பிச்சை: Chennai Super Kingsஐ பாராட்டிய கூகுள் சிஇஓ - இணையத்தில் வைரலாகும் ட்வீட்

குழப்பமடைந்த சுந்தர் பிச்சை, தன் தந்தைக்கு அழைத்து என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போது தான் விஷயம் தெரிந்துள்ளது.

தந்தையின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றொருவர், சுந்தர் பிச்சையின் மின்னஞ்சலை பிரிண்ட் அவுட் எடுத்து தந்தையிடம் கொடுத்துள்ளார்.

அதற்கு அவரது தந்தை என்ன பதில் சொன்னாரோ அதனை குறித்துக்கொண்டு சுந்தர் பிச்சைக்கு பதிலளித்துள்ளார். இதனால் தான் இந்த குழப்பம்.

தனது இந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சுந்தர் பிச்சை, அந்த சமயத்திற்கும் இப்போதும் தொழில்நுட்பம் எப்படி வளர்ந்திருக்கிறது, மாறியிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இந்த 25 ஆண்டுகளில் கூகுளின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் சுந்தர் பிச்சை நன்றி தெரிவித்தார்

கூகுள்: 25 ஆண்டுகளுக்கு முன் தந்தைக்கு ஈமெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை - நெகிழ்ச்சி கதை!
கூகுள்: ஒரு மணிநேர வேலை, ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்- என்ன சொல்கிறார் 20 வயது இஞ்சினியர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com