நியூயார்க் : மர்ம நபர்களால் தாக்கப்பட்ட 2 சீக்கியர்கள் - என்ன நடந்தது?

நியூயார்க் நகரில் 2 சீக்கியர்களை தலைப்பாகைகளை கழற்ற வைத்து மர்ம நபர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
New york
New yorkTwitter
Published on

நியூயார்க் நகரின் ரிச்மண்ட் ஹில்ஸ் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் சீக்கியர் ஒருவரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். அதே பகுதியில் இன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சிக்கியர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதையடுத்து, நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் புரூக்ளின் சுரங்கப்பாதை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தன்று இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு மர்மநபர்கள் சீக்கியர்கள் இரண்டு பேரின் தலைப்பாகைகளை கழற்ற வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

New york
உத்தர பிரதேசம்: கைத்துப்பாக்கியுடன் சென்ற பள்ளி ஆசிரியர் கைது

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், காவல்துறையினரை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com