கரடி பொம்மைக்குள் ஒளிந்திருந்த திருடன் - மாட்டிக்கொண்டது எப்படி?

பல இடங்களில் இவரை தேடி வந்த போலீசார் கடைசியாக அவரது காதலியின் வீட்டில் அவர் மறைந்திருப்பதை தெரிந்துகொண்டு அங்கு தேட சென்றனர்.
டெடி பேர்
டெடி பேர்canva

காரை திருடிவிட்டு தலைமறைவாக இருந்துவந்த நபரை, ஒரு கரடி பொம்மைக்குள்ளிருந்து கண்டுபிடித்துள்ளனர் லண்டன் போலீசார்.


18 வயதாகும் ஜோஷுவா டாப்சன் என்ற இளைஞர், கார் திருடிய குற்றத்திற்காக கடந்த மே மாதம் முதல் தேடப்பட்டு வருகிறார். பல இடங்களில் இவரை தேடி வந்த போலீசார் கடைசியாக அவரது காதலியின் வீட்டில் அவர் மறைந்திருப்பதை தெரிந்துகொண்டு அங்கு தேட சென்றனர்.

காதலியின் வீட்டில் மான்செஸ்டர் நகர காவல் துறையினர் தேடிக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த டெடி பேர் பொம்மை அசைவதை கவனித்துள்ளனர். அப்போது தான் அந்த பொம்மைக்குள் ஜொஷுவா மறைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

காவல் துறையினர் அங்கு வருவதை கண்டு அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்த ஜோஷுவா என்ன செய்வதென்று தெரியாமல், பொம்மையை கிழித்து அதற்குள் சென்று ஒளிந்துகொண்டுள்ளார்.

ஜோஷுவாவை கைது செய்த போலீசார் வாகனம் திருடிய குற்றத்திற்காக அவரை சிறையில் அடைத்துள்ளனர். காரை திருடியது, முறையான லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் காருக்கு பெட்ரோல் நிறப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பித்த குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும் ஜோஷுவா மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்ததால், 27 மாதங்களுக்கு அவருக்கு வாகனம் ஓட்ட தடை மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

டெடி பேர்
முதியவருக்கு உதவிய காவல் அதிகாரி - நெகிழ வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com