உக்ரைன்: விஷம் இருப்பது தெரியாமல் செர்ரி பழத்தை திருடி தின்ற ரஷ்ய வீரர்கள் - என்ன நடந்தது?

ரஷ்யாவை முடிந்த வரை எதிர்த்து வருகிறது உக்ரைன். ரஷ்யப் படைகளை தங்கள் நாட்டை விட்டு விரட்டியடிப்போம் என்பதில் உக்ரைனிய அரசு, இராணுவத்துடன் மக்களும் உறுதியாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது இந்த செய்தி.
செர்ரி பழங்கள் மூலம் ரஷ்ய படைகளுக்கு விஷம் வைத்த விவசாயிகள்
செர்ரி பழங்கள் மூலம் ரஷ்ய படைகளுக்கு விஷம் வைத்த விவசாயிகள்Twitter

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி இன்று வரை உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. 115 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைன் பல இழப்புகளைச் சந்தித்து வருகிறது. உக்ரைனிய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெண்களின் நிலையும் மிகக் கவலைக்கிடமாக இருக்கிறது.

எனினும், ரஷ்யாவை முடிந்த வரை எதிர்த்து வருகிறது உக்ரைன். சில நாட்களுக்கு முன் ரஷ்ய படைகளின் டாங்கிகளை உக்ரேனிய விவசாயிகள் ட்ராக்டரில் கட்டி இழுத்துவரும் வீடியோ வெளியானது. அதேபோல மற்றொரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார் மெலிடோபோல் நகரின் மேயர்.

உக்ரைன் நகரமான மெலிடோபோல் -ன் மேயர் இவான் ஃபெடெரோவ் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலில் உக்ரைன் விவசாயிகள் ரஷ்ய படைகளை செர்ரி பழங்களில் விஷம் வைத்து தாக்குகின்றனர். இதனால் ரஷ்ய வீரர்களுக்கு பல நோய்கள் ஏற்படும் எனக் கூறினார்.

இதுவரை ரஷ்ய படைகள் கைப்பற்றிய உக்ரைனிய பகுதிகளை முழுவதுமாக பயன்படுத்தி வருகின்றனர். மெலிடோபோல் நகரில் விளையும் செர்ரி பழங்களை கிரிமியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் விவசாயிகள் செர்ரி பழங்களில் நஞ்சை தெளித்ததாக இவான் ஃபெடெரோவ் கூறியுள்ளார்.

செர்ரி பழங்கள் மூலம் ரஷ்ய படைகளுக்கு விஷம் வைத்த விவசாயிகள்
Ukraine Russia war : உக்ரைன் போரில் ரசியாவை ஆதரிக்கும் பெலாரஸ் நாடு - ஏன் தெரியுமா?
 மேயர் இவான் ஃபெடெரோவ்
மேயர் இவான் ஃபெடெரோவ்Twitter

"எங்கள் விவசாயிகள் உக்ரைன் வீரர்களுக்கு ஒரு பரிசினை அளித்துள்ளனர். அது தான் ஃப்ரெஷான இனிப்பு செர்ரி பழங்கள். இது ரஷ்ய வீரர்களிடையே கடுமையான நோயை ஏற்படுத்தும். எங்களிடம் இருந்து எதையும் திருட வேண்டாம். இவை எங்கள் விவசாயிகளின் கடின உழைப்பால் உருவானது." எனக் கூறினார் இவான்.

செர்ரி பழங்கள் மூலம் ரஷ்ய படைகளுக்கு விஷம் வைத்த விவசாயிகள்
சிங்கப்பூர் மக்களின் உணவுதட்டில் கை வைத்த உக்ரைன் ரஷ்யா போர் - என்ன நடக்கிறது தெரியுமா?

விவசாயிகளின் நடவடிக்கையை பர்டிசன் இயக்கம் என்கிறார் மேயர். பர்டிசன் என்பது நாஜி படைகளால் கைப்பற்றப்பட்ட இத்தாலிய நகரங்களில் மக்கள் நடத்திய போராகும். மேலும் மெலிடோபோலின் 99% பேர் இந்த இயக்கத்தில் செயல்படுபவர்கள் தான் என்றும் கூறியுள்ளார் மேயர் இவான் ஃபெடெரோவ்.

மெலிடோபோல் நகரம் போரின் முதல் நாள் முதல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின்நிலையம் இங்கு தான் இருக்கிறது.

செர்ரி பழங்கள் மூலம் ரஷ்ய படைகளுக்கு விஷம் வைத்த விவசாயிகள்
உக்ரைன் போர் : கருங்கடலில் கண்ணிவெடி வைத்த ரஷ்யா - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com