உக்ரைன் போர் : கருங்கடலில் கண்ணிவெடி வைத்த ரஷ்யா - என்ன நடக்கிறது அங்கே?

உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் கடற்கரையை ஜார்ஜியா, ருமேனியா, பல்கேரியா மற்றும் துருக்கி ஆகிய நேட்டோ உறுப்பினர் நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றன.
கருங்கடல்
கருங்கடல்Twitter

தனது குடும்பத்தினரோடு கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர், தற்செயலாக அங்கிருந்த சுரங்கத்தில் மோதி வெடித்துச் சிதறினார். இந்த சம்பவம் உக்ரைன் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியினால் நடந்திருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்திருக்கிறது.

அந்த நபர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவரது மனைவி, மகன் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் மகிழ்ச்சியாகக் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

போரினால் பாதிக்கப்பட்ட ஒடெசா பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகளில், தண்ணீருக்குள் ஏதோ வெடிப்பதற்குச் சற்று முன்பு மக்கள் கடற்கரையை நோக்கி ஓடுவதைக் காட்டியிருக்கிறது. ஏற்கனவே ரஷ்யாவுடன் போர் நடைபெற்று வருவதன் காரணமாக, கடற்கரைப் பகுதியில் நீருக்கடியில் நீந்துவதை உள்ளூர் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு ரஷ்யாதான் காரணமென்றும், அவர்களின் படைகள் தான் கருங்கடலில் வேண்டுமென்றே கண்ணிவெடிகளைப் புதைப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருக்கிறது. கிரெம்ளின் படைகளோ, கியேவ் தான் காரணம் என்று குற்றம் சாட்டி இருக்கிறது.

<div class="paragraphs"><p>Ukraine war</p></div>

Ukraine war

NewsSense

போரில் பயன்படுத்தப்பட்ட கடற்படை கண்ணிவெடிகள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மிதக்கும்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் பயன்படுத்தப்பட்ட சில மிக ஆபத்தான ஆயுதங்களால் முழு கருங்கடல் பகுதியும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது.

கருங்கடல்
விளாடிமிர் புதின் : உளவாளி, கொலைகாரர், பெரும் பணக்காரர் - யார் இந்த Putin?

உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் கடற்கரையை ஜார்ஜியா, ருமேனியா, பல்கேரியா மற்றும் துருக்கி ஆகிய நேட்டோ உறுப்பினர் நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றன. போரின் தொடக்கத்திலிருந்து நான்கு சுரங்கங்கள் உக்ரேனிய கடற்கரையிலும், மூன்று துருக்கிய கடற்பகுதியிலும், ஒன்று ருமேனியா கடற்கரையிலும் காணப்பட்டன. தவறான கண்ணிவெடிகளால் இப்பகுதியில் கடல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கருங்கடல்
Ukraine Russia War : Go and F**k yourself எனக் கூறிய உக்ரைன் வீரர்கள் மரணிக்கவில்லை

"ஒடெசா பிராந்தியத்தின் குடியிருப்பாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் இராணுவச் சட்டத்தின் விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது. கருங்கடலின் கரையோரப் பாதுகாப்பு மண்டலத்திற்குச் செல்ல வேண்டாம் எனவும், கடலில் நீந்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்” என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

கருங்கடல்
ரஷ்யாவிலிருந்து வெளியேறும் 15,000 கோடீஸ்வரர்கள் : இதுதான் காரணம் - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com