சீனாவில் 12 நாட்களாக ஒரே பக்கமாக வட்டமடிக்கும் செம்மறி ஆடுகள்; ஏலியன்களின் தாக்கமா?

பண்ணையில் மொத்தம் 34 ஆட்டு தொழுவங்கள் இருக்கிறது எனவும், 13ஆம் எண் தொழுவத்தில் இருக்கும் ஆடுகளிடம் தான் இந்த வினோத செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மியாவோ தெரிவித்தார்.
ஒரே பக்கமாக வட்டமடிக்கும் செம்மறி ஆடுகள்
ஒரே பக்கமாக வட்டமடிக்கும் செம்மறி ஆடுகள்Twitter
Published on

சீனாவில் தொடர்ந்து 12 நாட்களாக ஒரே இடத்தில் செம்மறி ஆடுகள் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் மங்கோலியா நகரில் செம்மறி ஆட்டுக் கூட்டம் சுமார் 12 நாட்களாக ஒரே இடத்தை இடைவிடாமல் வட்டமிட்டு கொண்டிருகின்றன. ஆடுகளின் இந்த விசித்திர நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. இதன் வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

சீனாவின் பீபிள்ஸ் டெய்லி என்ற பத்திரிகையின் டிவிட்டர் தளத்தில் ஆடுகள், பண்ணையில் இப்படி இரவு பகலாக வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ பகிரப்பட்டது. கடந்த 4 ஆம் தேதியிலிருந்தே இந்த ஆடுகள் இப்படி வட்டமடித்துக் கொண்டிருப்பதாக அந்த டிவிட்டர் பக்கம் தெரிவிக்கிறது.

மேலும் இந்த ஆடுகள் இப்படி வட்டமடிக்க தொடங்கியதிலிருந்து உணவோ, தண்ணீரோ அருந்தியதா என்று தெரியவில்லை.

ஒரு சிலர் இதனை ஏலியன்களின் தாக்கமாக இருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த ஆடுகள் அனைத்தும் ஆரோக்கியமாக தான் இருக்கிறது என்று உரிமையாளர் கூறுகிறார்.

ஆடுகளின் உரிமையாளர் மியாவோ கூறுகையில், முதலில் ஒரு சில ஆடுகள் தான் இப்படி வட்டமடிக்க ஆரம்பித்தது எனவும், மெதுவாக மற்ற ஆடுகளும் சேர்ந்துகொண்டது எனவும் தெரிவித்தார்.

பண்ணையில் மொத்தம் 34 ஆட்டு தொழுவங்கள் இருக்கிறது எனவும், 13ஆம் எண் தொழுவத்தில் இருக்கும் ஆடுகளிடம் தான் இந்த வினோத செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மியாவோ தெரிவித்தார்.

இதனால் ஏதோ அமானுஷ்ய சக்தி தான் இந்த ஆடுகளை இப்படி செயல்பட வைக்கிறது என்கின்றனர் மக்கள்.

ஒரே பக்கமாக வட்டமடிக்கும் செம்மறி ஆடுகள்
உலகிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட செம்மறி ஆடுகள் - எத்தனை கோடி தெரியுமா?

ஆனால், மருத்துவ வல்லுநர்கள் இது லிஸ்டெரியோசிஸ் (Listeriosis) என்ற பாக்டீரியா நோயின் தாக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். Listeriosis ஏற்படுவதனால் மூளையின் ஒரு பக்கத்தில் வீக்கம் ஏற்படும். இதன் தாக்கத்தால் செம்மறி ஆடுகள் விசித்திரமாக செயல்படும் எனவும் அறிவியல் காரணங்கள் கூறுகின்றன.

"ஆரம்பத்தில், பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு பசி எடுக்காது. கூடவே மனச்சோர்வு ஏற்பட்டு, இவைகளுக்குள் ஒற்றுமையின்மை ஏற்படலாம். விலங்குகள் ஒரு ஓரமாக, மூலைகளில் நின்றுகொள்ளும், ஏதாவது நிலையான பொருட்களின் மேல் சாய்ந்துகொள்ளும், அல்லது மூளையின் எந்த பக்கத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதோ, அந்த பக்கத்தை நோக்கி வட்டமிடலாம்" என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆடுகள் தொடர்ச்சியாக வட்டமடித்துக்கொண்டிருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே பக்கமாக வட்டமடிக்கும் செம்மறி ஆடுகள்
குரங்களுக்கு சொத்துரிமை அளித்துவரும் வினோத கிராமம்! - பாரம்பரியத்தை இழக்கிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com