இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே NewsSense

கோத்தபய ராஜபக்சே: ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு தப்பினாரா? இலங்கை ஊடகங்கள் சொல்வது என்ன?

போராட்டக்காரர்கள் கடந்த 9ம் தேதி ஜனாதிபதி மாளிகை மற்றும் அலுவலகத்தைக் கைப்பற்றினர். அங்கிருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே தற்போது எங்கு இருக்கிறார்? அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பவைக் கேள்விக்குறியாக இருக்கிறது.
Published on

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பெரும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது. அடிப்படை வசதிகள் கூட கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலையில் மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் கடந்த 9ம் தேதி ஜனாதிபதி மாளிகை மற்றும் அலுவலகத்தைக் கைப்பற்றினர். அங்கிருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே தற்போது எங்கு இருக்கிறார்? அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பவை கேள்விக்குறியாக இருக்கின்றன.

கோத்தபய ராஜபக்சே வரும் 13ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்த போதும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை விடுவிக்கவில்லை.

அங்கிருந்து வெளியான வீடியோக்கள் சமுக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டன.

கோத்தபய ராஜபக்சே எங்கு சென்றார்? நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா? போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் அதிகம் கேட்கப்படுவதாக இருக்கிறது.

ஜனாதிபதி இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஒரு இராணுவப் பிரிவினால் பாதுகாக்கப்படுகிறார் என்று உயர் பாதுகாப்பு வட்டாரம் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை கைப்பற்றிய மக்கள் - என்ன நடக்கிறது அங்கே?

கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்களில் கோத்தபயவின் உடமைகள் ஏற்றப்பட்டன. அவர் கடல்வழியாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்கிறார் என செய்திகள் வெளியாகின.

அவர் விமான நிலையம் சென்று விமானம் வழியாக தப்பிச் செல்ல முயல்வதாகவும் சில பேச்சுகள் எழுந்தன. ஆனால் உண்மையில் அவர் எங்கிருக்கிறார் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
எரியும் இலங்கை, உடையும் செருக்கு: அதிபர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்- தப்பினாரா கோத்தபய?

தற்போது சர்வதேச ஊடகங்கள், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இன்று காலை கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

அவர் வருகைக்காக ரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்போது அவர் அங்குதானிருக்கிறார்.

அவரைச் சந்திப்பதற்காக முப்படைத் தலைவர்கள் மற்றும் முக்கிய பாதுக்காப்பு அதிகாரிகளின் குழு அங்கு செல்கிறது.

அதிகாரிகள் சந்திப்புக்கு பிறகு அவர் எங்கு செல்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. என செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கை : பொருளாதார நெருக்கடி - தீவு தேசம் மீள என்ன வழி? - விரிவான விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com