ஏலியன்களால் உருவாக்கப்பட்டதா இந்த கடலுக்கடியில் இருக்கும் மர்மம்? அறிவியல் சொல்வதென்ன?

இந்த தளம் வேற்றுகிரகவாசிகளால் உருவாக்கப்பட்டது என்றும் சிலர் ஊகிக்கிறார்கள். இந்த கடலுக்கடியில் இருக்கும் கண்கவர் தளம் குறித்து என்னென்ன கோட்பாடுகள் கூறுகின்றனர் என்று இங்கே பார்க்கலாம்.
Who created Japan’s Yonaguni Monument? Man, Nature or Aliens?
Who created Japan’s Yonaguni Monument? Man, Nature or Aliens? Twitter

ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள யோனகுனி தீவின் கடற்கரையில் அமைந்துள்ளது இந்த நினைவுச்சின்னம். கடலுக்கடியில் மூழ்கிய நிலையில் காணப்படும் சிதைந்த பாறையாலான ஒரு அமைப்பாக இது கண்டறியப்பட்டுள்ளது.

யோனகுனி நினைவுச்சின்னம் நீர்மூழ்கிக் கப்பல் இடிபாடுகளின் மர்மத்தில் மறைக்கப்பட்ட ஒரு நம்பமுடியாத கண்கவர் நீருக்கடியில் பாறை உருவாக்கம் ஆகும்.

இந்த தளம் 1980களின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது எப்படி உருவானது என்பது குறித்து பல கோட்பாடுகளை முன் வைக்கின்றனர்.

இந்த தளம் வேற்றுகிரகவாசிகளால் உருவாக்கப்பட்டது என்றும் சிலர் ஊகிக்கிறார்கள், இந்த கடலுக்கடியில் இருக்கும் கண்கவர் தளம் குறித்து என்னென்ன கோட்பாடுகள் கூறுகின்றனர் என்று இங்கே பார்க்கலாம்.

கோட்பாடு 1

சில ஆராய்ச்சியாளர்கள் இந்த தளம் இயற்கையான புவியியல் உருவாக்கத்தின் விளைவு என்று கூறுகின்றனர்.

இதன் அடித்தளத்தைச் சுற்றி மூன்று பகுதிகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. மனிதனின் முகம் போன்ற 7 மீட்டர் உயரம் உள்ள பாறையும், இரண்டு பெரிய தூண்களும் இந்த தளம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வடிவங்கள் டெக்டோனிக் மூலம் உருவானதாக கூறுகின்றனர். டெக்டோனிக் என்பது பூமியில் உள்ள பாறைமண்டலத்தின் பேரளவு அசைவை கூறும் அறிவியல் கோட்பாடு.

கோட்பாடு 2

சிலர் இது மனிதனால் உருவாக்கப்பட்டது என்கின்றனர். நினைவுச்சின்னத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு மனிதர்களின் உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சில ஆராய்ச்சியாளர்களோ இது போன்ற அமைப்பு மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்கின்றனர்.

இந்த அமைப்பு நிச்சயமாக பண்டைய காலத்தைச் சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின் படி, இந்த கட்டமைப்புகள் பண்டைய நாகரிகத்தைச் சேர்ந்த மக்களால் கல் கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன.

நினைவுச்சின்னங்களைப் பார்க்கும்போது, ​​அவை சடங்கு மேடைகளாகவோ அல்லது சில வகையான கோட்டைகளாகவோ கூட இருக்கலாம். இந்த கட்டமைப்புகள் 12,000 ஆண்டுகளுக்கு முந்தையவை.

Who created Japan’s Yonaguni Monument? Man, Nature or Aliens?
இந்தியாவில் துவாரகா; உலகெங்கிலும் நீருக்கடியில் மூழ்கிய பழமையான நகரங்கள் பற்றி தெரியுமா?

கோட்பாடு 3

ஏலியன்கள் இதை உருவாக்கினார்கள் என்றும் சிலர் நம்புகின்றனர். இந்த கோட்பாடு யூனிகார்ன்கள் இந்த உலகில் இருக்கும் உயிரினங்கள் என்பது போன்றதொரு கூற்றாக இருக்கலாம்.

யோனகுனி நினைவுச்சின்னம் இயற்கை மற்றும் மனித தொடுதலின் விளைவாக உருவாகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. யோனகுனி நினைவுச்சின்னம் ஒரு இயற்கையான உருவாக்கமாகத் தொடங்கினாலும், பழங்காலத்தவர்கள் அவர்களது கல் கருவிகளைப் பயன்படுத்தி அதை மாற்றியமைத்திருக்க வாய்ப்பு உள்ளது. காலப்போக்கில், இந்த அமைப்பு பூமியின் மற்ற இடங்களைப் போலவே நீரில் மூழ்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நீருக்கடியில் சோனார் மேப்பிங், 3டி மாடலிங் மற்றும் புவி இயற்பியல் ஆய்வுகள் போன்ற அதிதொழில்நுட்பங்கள் அனைத்தும் இந்த மர்மமான தளத்தின் தோற்றத்தை தீர்மானிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. உண்மையாகவே இந்த தளம் எப்படி உருவானது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கூறும் வரை காத்திருப்போம் அல்லது உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் மர்மம் போன்று இதுவும் இருக்கட்டும்!

Who created Japan’s Yonaguni Monument? Man, Nature or Aliens?
Gujarat: கடலுக்குள் மூழ்கிய நகரம்; கிருஷ்ணர் உருவாக்கிய 'துவாரகா' - சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com