வீட்டு சாவியை கேட்டு தொல்லை செய்த மாமியார் : ஸ்மார்ட்டாக யோசித்த மருமகள் - என்ன செய்தார்?

அவர் செய்தது தவறு தான் என்றாலும், அதை ஒப்புக்கொள்ளாமல், தனது மருமகளை குற்றம் சாட்டியிருக்கிறார் அந்த மாமியார். மேலும், அவரை புண்படுத்தியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்மாறு தன் கணவர் வற்புறுத்தியதாகவும் அந்த பதிவில் அப்பெண் கூறியிருந்தார்.
மாமியார் தொல்லை தாங்கவில்லை: வீட்டின் போலி சாவியை கொடுத்த மருமகள்
மாமியார் தொல்லை தாங்கவில்லை: வீட்டின் போலி சாவியை கொடுத்த மருமகள்canva
Published on

மாமியார் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை செய்வதால் வீட்டின் போலி சாவியை அவருக்கு கொடுத்திருக்கிறார் பெண் ஒருவர்.

திருமணத்திற்கு பிறகு என்னதான் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்தாலும், நமக்கென்று கொஞ்சம் பிரைவசி வேண்டும் என தம்பதிகள் நினைப்பது இயல்பே.

மாமியார் தங்களது பிரைவசியை கெடுக்கிறார் என்பதனால் அவரை சமாளிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளார் பெண் ஒருவர். ரெட் இட் தளத்தில் தனது கதையை பகிர்ந்திருந்தார் அவர்.

பெயர் குறிப்பிடாத அந்த பெண், சமீபத்தில் அவரும் அவரது கணவரும் புதிய வீடு வாங்கியதாகவும், அந்த வீட்டிற்கான மாற்று சாவியை கொடுக்குமாறு அவரது மாமியார் கேட்டதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு மாமியாரிடம் வீட்டு சாவியை கொடுக்க விருப்பமில்லை என்பதால் என்ன செய்வதென்று யோசித்துள்ளார்.

காரணம், இதற்கு முன்னர் அந்த பெண் தன் கணவருடன் தனிமையில் இருந்தபோது திடீரென மாமியார் வீட்டிற்கு வந்ததாகவும், அடிக்கடி இப்படி செய்து தங்களை சங்கடத்திற்கு ஆளாக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மாமியார் தொல்லை தாங்கவில்லை: வீட்டின் போலி சாவியை கொடுத்த மருமகள்
சர்ப்ரைஸாக போன் வாங்கி கொடுத்த கணவர் - தற்கொலை செய்து கொண்ட மனைவி - நடந்தது என்ன?

இதனால், வீடு மாற்றிய மருமகள் மாமியாரிடம் சாவி கொடுக்க என்ன செய்வதென்று யோசித்து, மாற்று சாவி என்ற பெயரில், போலி சாவியை அவருக்கு வழங்கியுள்ளார். ஆனால், பாவம் வெகு காலத்திற்கு அந்த பெண்ணால் தன் மாமியாரை சமாளிக்க முடியவில்லை. கிறிஸ்துமஸ் விருந்திற்கு அனைவரும் ஒன்று கூடியபோது, இந்த ரகசியத்தை கண்டுபிடித்த மாமியார் அவருடன் சண்டையிட்டதாக அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

பொறுமையை இழந்த அவர், தான் கொடுத்தது போலி சாவி என எப்படி கண்டுபிடித்தார் எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த மாமியார், தனது மகனும் மருமகளும் வீட்டில் இல்லாதபோது வந்து சோதித்து பார்த்தாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் செய்தது தவறு தான் என்றாலும், அதை ஒப்புக்கொள்ளாமல், தனது மருமகளை குற்றம் சாட்டியிருக்கிறார் அந்த மாமியார். மேலும், அவரை புண்படுத்தியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்மாறு தன் கணவர் வற்புறுத்தியதாகவும் அந்த பதிவில் அப்பெண் கூறியிருந்தார்.

இந்த கதையை அறிந்த இணையவாசிகள், அந்த பெண் செய்தது சரி எனவும், இதனால் அவர் கவலைக்கொள்ள தேவையில்லை எனவும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்ரனர்.

மாமியார் தொல்லை தாங்கவில்லை: வீட்டின் போலி சாவியை கொடுத்த மருமகள்
உலகின் மோசமான மாமியார் : மருமகளுக்கு போடப்பட்ட 14 கண்டிஷன்ஸ் - வைரலாகும் ட்வீட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com