கரப்பான் பூச்சி : நீதிமன்றத்தில் திறந்து விட்ட பெண் - நடந்தது என்ன?

அமெரிக்காவில் பெண் ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான்பூச்சிகளை நீதிமன்றத்திற்குள் திறந்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரப்பான்களை அகற்றுவதற்காக ஃப்யூமிகேஷன் செய்ய நீதிமன்றம் மூடப்பட்டது.
கரப்பான் பூச்சி : நீதிமன்றத்தில் திறந்து விட்ட பெண் - நடந்தது என்ன?
கரப்பான் பூச்சி : நீதிமன்றத்தில் திறந்து விட்ட பெண் - நடந்தது என்ன?NewsSense
Published on

ரஜினிமுருகன் திரைப்படத்தில் பஞ்சாயத்தை கலைக்க மாட்டை ஓட்டிவிடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். நம்ம ஊரு பஞ்சாயத்துகளில் தான் இதெல்லாம் செல்லுபடியாகும் நீதிமன்றங்களில் முடியாது என்று நினைக்கும் போது, அமெரிக்க நீதிமன்றத்திலேயே அப்படி ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் பெண் ஒருவர்.

வினோதங்களுக்குப் பெயர்பெற்ற நியூயார்க் நகரத்தில் நடந்த அந்த சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Court
CourtPexels
கரப்பான் பூச்சி : நீதிமன்றத்தில் திறந்து விட்ட பெண் - நடந்தது என்ன?
வாழைப்பழங்களுக்கு அஞ்சும் ஆண் எலிகள் - ஆச்சரியப்படுத்தும் ஆய்வு தகவல்

நியூயார்க்கில் அமைந்துள்ள அல்பானி நகர நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. தலைநகரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை குறித்த விசாரணையின் போது அங்கு வந்திருந்த ஒரு 34 வயது பெண், தன்னோடு எடுத்து வந்திருந்த டப்பாவை திடீரென திறந்துவிட்டார்.

அவர் திறந்தது தான் தாமதமென்று, உள்ளிருந்து நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சிகள் விசாரணை நடந்துகொண்டிருந்த மன்றத்தைச் சூழ்ந்தது. இதனால் வழக்கு விசாரணை தடைபட்டு, திறந்து விடப்பட்ட கரப்பான்களை அகற்றவே அந்த நாள் முழுவதும் சென்றுள்ளது.

விஷயம் சமூக வலைத்தளங்களில் பரவ, நெட்டிசன்களின் ட்ரோல்களுக்கு எல்லை இல்லை!

குற்றம் சாட்டப்பட்ட நால்வர் மீதும் கவனம் செல்லக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அந்த பெண் இப்படி ஒரு செயலை செய்திருக்கலாம் என்று அல்பானி நீதிமன்றத்தில் அட்டர்னி அலுவகத்தில் இருக்கும் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கரப்பான்களை திறந்து விட்ட பெண் மீதும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற நடத்தை, அரசாங்க நிர்வாகத்தைத் தடுத்தல் மற்றும் ஆதாரங்களைச் சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

Cockroaches
CockroachesPexels

பொதுவாக நாம் பார்க்கும் படங்களில் சரியாக தீர்ப்பு நேரத்தில் ஆதரங்களுடன் ஒருவர் நீதிமன்றத்தை குறுக்கிடுவார். அந்த ஆதாரம் ஹீரோவுக்கு சாதகமானதாக இருக்க, வில்லனை கைது செய்துவிடுவார்கள்!

ஆனால் பாவம் இங்கு அந்த பெண் மாட்டிக்கொண்டார்.

கரப்பான் பூச்சி : நீதிமன்றத்தில் திறந்து விட்ட பெண் - நடந்தது என்ன?
இளைஞரை இழுத்துப் பிடித்த குரங்கு - இணையத்தில் வைரலான கிளாமர் அப்பீல் சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com