உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கி, தனது முதல் விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார். துருக்கிய ஏர்லைன்ஸில் ஆறு இருக்கைகளை அகற்றிய பின்னர், ருமேசா இந்த பயணத்தை, மேற்கொண்டார்
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு 13 மணி நேர விமானத்தில் கெல்கி சென்றார்.
கின்னஸ் படி அவரது உயரம் 215.16 செமீ (7 அடி 0.7 அங்குலம்)
இது குறித்து கெல்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியதாவது: இது எனது முதல் விமானப் பயணம். ஆனால் இது எனது கடைசி பயணமாக இருக்காது.
எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றி, என அவர் எழுதியுள்ளார். இது துருக்கிய ஏர்லைன்ஸ் உதவியுடன் சாத்தியமானது.
நிறுவனம் அதன் எகானமி பிரிவில் இருந்து அரை டஜன் இருக்கைகளை எடுத்து, ஜெல்கி படுத்திருக்க பிரத்யேகமாக ஒரு இடத்தை உருவாக்கியது.
அவர் தனது பயணத்தின் பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ருமேசா கெல்கி வீவர் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் தொழில்நுட்ப மென்பொருள் துறையில் பணிபுரியும் கெல்கி, தனது தொழிலை மேலும் மேம்படுத்த குறைந்தது ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இருப்பேன் என்று கூறுகிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust