ஆதித்த கரிகாலன் - வந்தியத்தேவன் - அருள்மொழி வர்மன் டிவிட்டர்
சினிமா

Ponniyin Selvan: தஞ்சை செல்கிறார் இளவரசர் - உடன் செல்லும் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன்

Keerthanaa R

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிறது எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கூடுதல் கதாசிரியராக எழுத்தாளர் ஜெயமோகன் பணியாற்றியிருக்கிறார்.

நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முறையே வந்தியத்தேவன், பொன்னியின் செல்வன், ஆதித்த கரிகாலன், குந்தவை, நந்தினியாக நடிக்கின்றனர். இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

செப்டம்பர் 30 ஆம் தேதி உலகளவில் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியானது. திரைப்படம் வெளியாக சில தினங்களே உள்ள நிலையில் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் தங்களது டிவிட்டர் கணக்குகளின் பெயர்களை அவரவர் கதாபாத்திரத்தின் பெயராக மாற்றியுள்ளனர். அது மட்டுமில்லை...கதாபாத்திரங்களாகவே இவர்களது டிவிட்டர் சம்பாஷனைகளும் இருக்கின்றன. இதனால் ஏகபோக ஆவலை தூண்டிக்கொண்டிருக்கிறது திரைப்படம்.

இரண்டு நாட்களாக இவர்கள் டிவிட்டரில் பேசிக்கொள்வது படுவைரலாகியுள்ளது. படத்தின் ப்ரமோஷனுக்காக தஞ்சை செல்வதாக தன் டிவிட்டரில் விக்ரம், இல்லை இல்லை...இளவரசர் ஆதித்த கரிகாலர் அறிவித்திருந்தார். மேலும் தன்னுடன் வரும்படி, தம்பி அருள்மொழி வர்மனையும், நண்பன் வந்தியத்தேவனையும் அவர் அழைத்திருந்தார். "குந்தவை உடன் வருகிறாயா?" என்று தங்கையிடமும் கேட்டிருந்தார் இளவரசர்.

படம் வெளியாகும் முன் பெரியவரின் ஆசி பெற வேண்டும் என இவர்களை அழைத்திருந்தார் இளவரசர். முதலில் பதிலளித்த வந்தியத்தேவன், தனக்கு களைப்பாக இருப்பதால் , Work From Home கேட்டார். இளவரசரும் "இளைப்பாறு நண்பா" என ஒப்புக்கொண்டார். எனினும், தன் பாதுகாப்பு இல்லாமல் இளவரசரை எங்கும் அனுப்பமுடியாது எனக் கூறி புறப்படுவதாக சொல்லியிருக்கிறார் வாணர் குல வீரன்.

"தம்பிவுடையான் படைக்கு அஞ்சான்" என, பயணத்திற்கு தயாராகியிருக்கிறார் பொன்னியின் செல்வர். இளம்பிராட்டி குந்தவையின் Status மட்டும் இன்னும் என்னவென்று தெரியவில்லை! ஆகமோத்தம், தஞ்சைக்கு படையெடுக்கின்றனர் சோழர் குலவிளக்குகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?