ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் Twitter
சினிமா

பிக் பாஸ் புகழ் ஏடிகே உருக்கம் : ``தள்ளிப் போகாதே!’’

ஆதினி

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், அதை பற்றிய பரபரப்பும் குறைந்துவிடும், ஆனால் இம்முறை பிக்பாஸ் சீசன் 6 முடிந்தப் பிறகும் ஒவ்வொரு போட்டியாளர்கள் பதிவிடும் கருத்துகளும், ரசிகர்களின் எதிர்வினையும் வைரல் ஆகி வருகிறது. போட்டியாளர்களும் பேட்டி கொடுக்கும் போது மற்ற போட்டியாளர்களை குறை சொல்லி பேசி வருகின்றனர்.

இது முற்றிலும் தவறு என்று ஏடிகே ட்விட்டரில் வருத்தம் தெரிவித்திருந்தார். தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.

மேலும் இம்முறை அசீம், விக்ரமன், ஷிவின் போன்ற போட்டியாளர்களுக்கு fans meet-கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தன. விக்ரமனுக்கு நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் ஏடிகே கலந்து கொண்டு பிக் பாஸ் இல்லத்தில் நடந்த சுவாரஸ்ய தருணங்களை பகிர்ந்து கொண்டார். மற்ற போட்டியாளர்களை பற்றி பேசும் போது பேச மறுத்துவிட்டார்.

அசீம், தனலட்சுமி ரசிகர்கள் தொடர்ந்து ஏடிகே-வை டிவிட்டரில் விமர்சித்து வந்தாலும், எதையும் கண்டு கொள்ளாமல் பாசிடிவ்வா இருப்போம் என்று இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். Haters அவருக்கு கொடுத்த ’’ஊர் கிழவி’’ (#oorkelavi) என்னும் பட்டத்தை வைத்து ராப் பாடல் ஒன்றை வெளியிட்டு மாஸ் காட்டிவிட்டார்.

இவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ராம் ராமசாமியும் ராப் பாடல் பாடியிருக்கிறார். இந்த பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

``என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்றால், 'தள்ளி போகாதே' பாடலை அதிகாலை 3 மணிக்கு பதிவு செய்த அந்த தருணம் தான். இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒரே ஒரு அழைப்பில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்தார். ஒரு நொடியில் என் முழு வாழ்க்கையையும் மாற்றிய வசனத்தை எழுதி பதிவு செய்ய மொத்தம் 2 மணி நேரம் ஆனது.

பாடல் வெளியான முதல் நாளே, பாடலில் நான் பாடிய அந்த ராப் பகுதியை விமர்சித்து பாடலுக்கு பொருந்தவில்லை என்று ஒரு கட்டுரை எழுதப்பட்டது. ஆனால் 2 வாரங்களுக்கு பிறகு, நான் எழுதிய வரிகளைப் பாராட்டும் வகையில் இந்த வசனம் மிகவும் அற்புதமாக இருக்கிறது, கேட்க கேட்க பிடிக்கிறது என்று அதே பத்திரிக்கை முழு விமர்சனத்தையும் மறுபிரசுரம் செய்தது.

ஏ.ஆர். ரஹ்மான் சார், கௌதம் வாசுதேவ்மேனன் சார் மற்றும் எனது திறமையை நம்பியதற்கு ஒட்டுமொத்த குழுவுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். இந்த தருணங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன், நன்றியுடையவனாக இருப்பேன்.’’ என்று பகிர்ந்துள்ளார்.

முன்னர் ``பிரபல இசையமைப்பாளர் அனிருத் உடன் பணியாற்ற விருப்பம்’’ என்று ஏ.டி.கே டிவிட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?