PS2 : நான் ஒரு soup boy; மறைமுகமாக சிவகார்த்திகேயன் பற்றி பேசிய விக்ரம் - என்ன பேசினார்? Twitter
சினிமா

PS2 : நான் ஒரு soup boy; மறைமுகமாக சிவகார்த்திகேயன் பற்றி பேசிய விக்ரம் - என்ன பேசினார்?

Priyadharshini R

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 28ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் 2.

கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்தார்.

இந்தப் படத்தின் முதல் பாகத்தில், வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Ponniyin Selvan

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது. லைகா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகமும் ரிலீசாக உள்ள நிலையில், அதற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் ஆன்த்தமை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டார். பொன்னியின் செல்வன் ஆன்த்தம் வெளியீட்டில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் விக்ரம், நடிகர் சிவகார்த்திகேயனை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மிர்ச்சி விஜய், விக்ரமை பாட சொல்லிக் கேட்டபோது, முன்னதாக இதேபோன்ற ஒரு மேடையில் தொகுப்பாளரை பார்த்து, அவர் மிகக்பெரிய நடிகராக வருவார் என்று கூறினேன். அதேபோன்று அவர் தற்போது மிகப்பெரிய நடிகராக மாறியுள்ளார் என விக்ரம் பேசினார்.

அதேபோல மிர்ச்சி விஜய்யையும் குறிப்பிட நினைத்ததாகவும் ஆனால் அவர் பாட சொல்லி இம்சை செய்வதாகவும் விக்ரம் நகைச்சுவையாக தெரிவித்தார்

தொடர்ந்து கோவையில் நடைபெற்ற பிரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம்,

”பொள்ளாச்சியில் சூட்டிங்கில் தான் எனக்கு தெரியும் இட்லியில் 28 வகையும், தோசையில் 50 வகையும் இருக்கிறது என்று! நான் தற்போது டயட்டில் இருப்பாதல் பிரியாணி சாப்பிட கூப்பிட்ட போது போகமுடியவில்லை.

கோவை மக்கள் எப்படி இவ்வளவு அழகா பேசுறீங்க! எப்படிங்க அழகா பேசிறீங்க? நானும் ட்ரை பன்றேன் முடியல” என்றார்.

மேலும் பேசியவர், ”நிறைய மீம்கள் பார்த்திருக்கிறேன், சமீபத்தில் கூட ஆதித்யா வர்மா திரைப்படத்தில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். ஆதித்ய கரிகாலன் காதல் தோல்வியால் போருக்கு போறான் என்று பார்த்தேன்” என்றார்.

”காதல் தோல்வி நடிப்பு தனக்கு இயல்பாக வருவதற்கு காரணம் நான் ஒரிஜினல் Soup boy என்றார். காலேஜ் படிக்கும் போது bus stop, bus stop ஆக நிற்பேன் , யாரும் என்னை லவ் பண்ணது இல்லை” என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?