Vijay -Priyanka Chopra Twitter
சினிமா

"விஜயிடம் இருந்து இதை கற்றுக்கொண்டேன்" - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் குறிப்பு

Keerthanaa R

விஜய் குறித்து தனது வாழ்க்கை குறிப்பான அன்ஃபினிஷ்ட் (Unfinished) என்ற புத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா எழுதியிருந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் விஜயிடம் இருந்து தான் பணிவையும் பெருந்தன்மையையும் கற்றுக்கொண்டதாகக் கூறியிருந்தார்.


பிரபல பாலிவுட் நடிகையும் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா, தனது திரைப் பயணத்தை தமிழில் தமிழன் படத்திலிருந்து தான் தொடங்கினார். இந்த படத்தில் இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிரியங்கா, தனது திறமையினால் ஹாலிவுட் வரை சென்றவர். இரண்டு தேசிய விருதுகள், ஐந்து ஃபிலிம்ஃபேர் விருதுகளை தன் வசம் கொண்டுள்ள பிரியங்கா, இன்றும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம்.

Thamizhan movie stills

இவர் 2018ஆம் ஆண்டு ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார்.

பிரியங்கா சோப்ரா இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்த போது தனது வாழ்க்கையில் நடந்தவற்றைப் பற்றி எழுதிய குறிப்பு தான் Unfinished என்ற புத்தகம். இதில் இவரது திரைப்பயணத்தை பற்றியும் இவர் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த புத்தகம் பலரையும் கவர்ந்திருந்தது.


அதில் தான் முதன் முதலில் சினிமா பயணத்தை தமிழன் திரைப்படடத்தில் துவங்கிய போது நடிகர் விஜய் உடன் சேர்ந்து நடித்திருந்த அனுபவத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். "விஜயின் பணிவும் ரசிகர்களுடனான அவரது பெருந்தன்மையும், என் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது. இந்த குணத்தை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்" என்றார்.

Excerpt from Unfinished

மேலும் விஜய் ஒரு முறை பதினைந்து மணி நேரப் படப்பிடிப்புக்குப் பின் தன்னை காணக் காத்திருந்த ரசிகர்களுடன் பொறுமையாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டதையும், இதற்கு மட்டும் ஒன்றரை மணி நேரம் ஆனதையும் அவர் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வருடங்கள் கழித்து பிரியங்கா ஹாலிவுட் வெப்சீரீஸ் குவான்டிகோவில் நடித்துக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் பிரியங்காவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவேண்டும் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துள்ளனர். அப்போது, தமிழன் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் இதே மாதிரியான தருணத்தை கையாண்டதை நினைவு கூர்ந்ததாக அவர் கூறினார்.

தமிழன் படத்தில் இவர் விஜயுடன் இணைந்து, "உள்ளத்தை கிள்ளாதே.." என்ற பாடலையும் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ullaththai killaathey song stills

அங்கு நின்றுகொண்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபோது தான் விஜயிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தையும் அவர் விட்டுச் சென்ற சுவடுகளை பற்றியும் உணர்ந்ததாக பிரியங்கா குறிப்பிட்டார். மேலும் ஒரு முறை படப்பிடிப்பிற்காக செட்டுக்குள் வந்துவிட்டால், ஷூட்டிங் முடியும்வரை அங்கிருப்பார் என்றும், செட்டில் எல்லோருடனும் அவர் பழகிய விதம் அவருடைய பணிவை எடுத்துக்காட்டியது என்றும் அந்த புத்தகத்தில் சொல்லியிருந்தார் பிரியங்கா.

புத்தகம் வெளியான போதே இந்த குறிப்பு வைரலான நிலையில், ஒரு வருடம் கழித்து தற்போது மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

இதனால் செம்ம குஷியில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?