சமந்தா

 

Instagram

சினிமா

புகைப்படங்களை அகற்றிய சமந்தா - இதுதான் காரணம்

NewsSense Editorial Team

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டது. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இக்கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்று கடைசியில் அது விவாகரத்தில் முடிந்தது. இருவரும் நான்காவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிரிவதாக அறிவித்தனர்.

சமந்தா வாடகை தாய் மூலம் வேண்டுமானால் குழந்தை பெற்றுக்கொள்ள தயார் என்று தெரிவித்ததாக செய்தி வெளியானது. ஆனால் அதனை நாகசைதன்யாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் சமந்தா திருமணத்தின் போது உடுத்திய சேலையை நாகசைதன்யாவிடம் திரும்ப கொடுத்து அனுப்பினார்.

தற்போது ஒரு படி மேலே சென்று சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும், நாகசைதன்யாவும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை அதிலிருந்து அகற்றினார். அதோடு இருவரும் பிரிவதாக அறிவித்த செய்தியையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அகற்றினார். அது மட்டுமல்லாமல் நாகசைதன்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வதையும் சமந்தா அகற்றிவிட்டார். இதன் மூலம் நாகசைதன்யாவுடனான அனைத்து உறவுகளையும் சமந்தா அடியோடு அகற்றிவிட்டார். 2010ம் ஆண்டு சமந்தா அறிமுகமான படத்தின் படப்பிடிப்பின் ஷெட்டில் நாகசைதன்யாவை சந்தித்தார்.

பின்னர் அவர்களிடையே காதல் ஏற்பட்டது. நாகசைதன்யாவை பிரிவதற்கு சமந்தாவிற்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாக நாகசைதன்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்துவிட்டார். இப்போது சமந்தா முழுமையான நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?