Chaitra with Ajith

 

Twitter

சினிமா

Valimai : சைத்ராவுக்கு நடிகர் அஜித்தின் மேக் அப் மேன் கொடுத்த செம சப்ரைஸ்!

Antony Ajay R

ஜீ தமிழின் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தமிழ் சின்னதிரையின் க்யூட் வில்லியாக அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அதற்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியலில் நடித்திருந்தாலும், அந்த ரோல் அவருக்கு ரீச் கொடுக்கவில்லை. அடுத்ததாக யாரடி நீ மோகினி-யில் வில்லியாகக் களமிறங்கினார் சைத்ரா. தற்போது சன் டிவி-யில் கயல் என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜீ தமிழில் வில்லியாக மிரட்டியவர், சன் டிவியில் சாந்தமான நாயகியாகப் பட்டையைக் கிளப்பி வருகிறார். இதனிடையே வெள்ளித்திரையிலும் தடம் பதித்து விட்டார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, சமீபத்தில் வெளியான வலிமை படத்தில் நடிகர் அஜித் குமாருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சைத்ரா. சிறிய கதாபாத்திரம் என்றாலும், படம் முழுவதும் ஆங்காங்கே வந்து செல்வார். படம் வெளியானதும் சைத்ராவுக்கு பாராட்டுகள் குவிந்தன. ``வலிமை’ படத்தில் எனது நடிப்பு குறித்துப் பல செய்திகள் மற்றும் அழைப்புகள் வருகின்றன, இந்த ரோல் எனக்கு இந்தளவுக்கு பாரட்டுக்களை தேடித்தரும் என்று நான் நினைக்கவில்லை. என்னிடம் இவ்வளவு அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி’’ என்று தன் அன்பை வெளியிட்டார் சைத்ரா.

வலிமை

தற்போது அஜித் உடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ``எனக்குப் பிடித்த மனிதரான அஜித் குமார் சார் உடன் இரண்டு வருடங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. அன்று வலிமை ஷூட்டிங்கில் என்னுடைய கடைசி நாள்.அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள மிகவும் ஆவலாக இருந்தேன், அஜித் சாரின் மேக்கப் மேன் போனில் தான் இந்த புகைப்படம் எடுத்தோம். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு இந்த புகைப்படம் கிடைக்கும் என்று நினைத்தேன். எப்படியோ படம் ரிலீஸ் ஆக தாமதமாகிவிட்டது. சமீபத்தில் யூடியூப் சேனலில் பேட்டி ஒன்றில் அஜித் சாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எனக்குக் கிடைக்கவில்லை, அதன் பிறகு எந்த புகைப்படமும் அவருடன் எடுத்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தேன். , என்னுடைய இன்டர்வியூவை பார்த்துவிட்டு அஜித் சாரின் மேக்கப் மேன் உடனடியாக இந்த படத்தை அனுப்பி வைத்தார். இந்த புகைப்படத்தைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இப்போது இதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது.எனது மகிழ்ச்சியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் மிக்க நன்றி அண்ணா நீங்கள் இந்த நாளை மகிழ்ச்சியாக்கிவிட்டீர்கள்’ எனக் கூறியிருந்த சைத்ரா.

"விதியை மட்டும் நம்பு உனக்கு வரவேண்டியது எதுவாக இருந்தாலும் அது கண்டிப்பாக வரும் ’’ இவ்வாறும் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?