Summer : மண் பானைகளில் சமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் Twitter
ஹெல்த்

Summer : மண் பானைகளில் சமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

Priyadharshini R

மண் பானைகளில் சமைப்பது ஒரு பழமையான நடைமுறையாகும். ஆனால் அவற்றின் பயன்பாடு இந்த தலைமுறைகளிடமும் சரியான காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

உணவு சமைக்க மண் பானைகளைப் பயன்படுத்துவது உண்மையில் பாதுகாப்பான வழி. மண் பானைகளில் நுண்துளைகள் உள்ளன. இது உணவை மெதுவாகவும் சமமாகவும் சூடாக்க அனுமதிக்கிறது. இதன் விளைவாக சிறந்த சுவை மற்றும் ஊட்டச்சத்து தக்கவைக்கப்படுகிறது.

இரண்டாவதாக, மண் பானைகளில் சமைப்பதற்கு அதிக எண்ணெய் தேவையில்லை, இதன் விளைவாக ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.

ஆனால் மண் பானைகளில் உணவு சமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய ஐந்து குறிப்புகள் இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

பானையை ஊறவைத்தல்

பானையைப் பயன்படுத்துவதற்கு முன், பானையை சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். களிமண் பானைகள் நுண்துளைகளாக இருப்பதால், அவை ஈரப்பதத்தைத் தக்கவைத்து, விரிசல் ஏற்படாமல் தடுக்கும்.

பானையை ஊறவைத்த பிறகு, அதை ஒரு துணியால் துடைக்கவும். இப்போது அதில் தண்ணீர் நிரப்பி குறைந்த தீயில் வைக்கவும். அதை இரண்டு நிமிடங்களுக்கு சமைக்கவும். உங்கள் பானை இப்போது நன்றாகப் பதப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த வெப்பநிலையில் சமையல்

வழக்கமான பாத்திரங்களைப் போல, மண் பானைகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படுவதில்லை.

குறைந்த சுடரிலேயே சமைக்கலாம். மேலும், குறைந்த வெப்பநிலையில் சமைப்பது உணவை மெதுவாக சமைத்தாலும், தனித்துவமான பழமையான சுவைகளை உணவில் சேர்க்கக்கூடிய பண்பு இந்த மண் பானைக்கு உள்ளது.

மரத்தாலான அல்லது சிலிகான் கரண்டி

மண் பானையில் உள்ள உணவைக் கிளற உலோகக் கரண்டியைப் பயன்படுத்துவது அதன் உட்புறத்தை சேதப்படுத்தும்.

களிமண் பானைகளுக்கு, மர அல்லது சிலிகான் கரண்டி சிறந்த தேர்வு ஆகும். அவை அதிக வெப்பநிலையைத் தாங்கும் மேலும் களிமண் பானைகளின் மேற்பரப்பில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது.

தூசி அகற்றப்படுவதை உறுதி செய்யும்

பாத்திரத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவைச் சேர்த்து, பானையின் உட்புறச் சுவர்களில் தேய்க்கவும். பானை அனைத்து பக்கங்களிலும் மாவுடன் மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும். இப்போது பானையை கவிழ்ப்பதன் மூலம் அதிகப்படியான மாவு கீழே உதிரும்.

இது களிமண் துகள்கள் அல்லது தூசி அகற்றப்படுவதை உறுதி செய்யும். பாத்திரத்தை சூடாக்கி, மாவு சாம்பல் நிறமாக மாறும் வரை குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும். இப்போது வெப்பத்தை அணைத்து, ஒரு பருத்தி துணியால் பானையை சரியாக துடைக்கவும். மண் பானை இப்போது பயன்படுத்த தயாராக உள்ளது.

பானையை மெதுவாக சுத்தம் செய்யவும்

சோப்பு மற்றும் மென்மையான ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி மண் பானையை மெதுவாக சுத்தம் செய்யவும்.

சுத்தம் செய்தவுடன், காட்டன் துணியால் துடைக்கவும். களிமண் பானையை சூரிய ஒளியில் வைக்கவும். களிமண் பானையை சூரிய ஒளியில் உலர்த்துவது அதிலிருந்து ஈரப்பதத்தை அகற்ற சிறந்த வழியாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?