நமது நாள் பல் துலக்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கவேண்டும், இந்த பிரஷை தான் பயன்படுத்தவேண்டும், பிரஷ் பயன்படுத்துவதே தவறு, எப்படி பல் துலக்க வேண்டும் என பலரும், இந்த 5 நிமிட வேலைக்காக பல அறிவுரைகளை முன்வைப்பர்.
நிஜத்தில், பல் துலக்கும்போது நாம் கடைப்பிடிக்கவேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்.
நேரமில்லை என்பதற்காக வேகமாக பல் துலக்கிவிட்டு வரக்கூடாது. இதனால், நம் வாயில் இருக்கும் கிருமிகளும் அழியாது, துர்நாற்றமும் போகாது. மேலும், ஏனோ தானோ என்று பல் துலக்குவதால் ஈறுகள் விரைவில் வலுவிழந்துவிடும்.
நாம் ஒரே திசையில் தான் தினமும் பிரஷ் செய்கிறோம் என்றால், குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே சுத்தமாகும். மற்ற பகுதிகளை நாம் கவனிக்காமல் விட வாய்ப்புண்டு. பல் துலக்கும் போது எல்லா திசைகளிலும் தூரிகையை செலுத்துவது முக்கியம்
பல் துலக்கும்போது மென்மையாக துலக்கவேண்டும், அதிக அழுத்தம் கொடுத்து துலக்கினால், சரியாக பற்கள் சுத்தமாகாது மற்றும் ஈறுகள் வலுவிழக்கும்
நாம் பயன்படுத்தும் தூரிகையின் bristle (நாறு/முட்கள்) தடிமனானதாக இருக்கக்கூடாது. மென்மையாதாக இருந்தால் மட்டுமே ஈறுகளை இது பாதிக்காமல் இருக்கும்.
பிரஷில் உள்ள நாறுகள் பழையதாவதால், ஒரே பிரஷை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது சிறந்ததல்ல. இதனால், பற்கள் முழுமையாக சுத்தமாகாது மற்றும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்
சிலருக்கு, நாம் சாப்பிட்ட உணவின் வாசனை வாயில் வந்தால் பிடிக்காது. இதனால் சாப்பிட்டவுடன் சென்று பல் தேய்ப்பர். ஆனால் இது சிறந்த பழக்கம் அல்ல. சாப்பிட்டு முடித்து குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் பல் துல்லக்கவேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust