டீ பிரியர்களே உஷார்! மாலை நேரத்தில் தேநீர் குடிக்க கூடாது - ஏன் ? Twitter
ஹெல்த்

டீ பிரியர்களே உஷார்! மாலை நேரத்தில் தேநீர் குடிக்க கூடாது - ஏன் ?

Keerthanaa R

டீ என்ற வார்த்தை நம்மில் பலருக்கு ஒரு எமோஷன். காலை எழுந்தவுடன் பல் துலக்குகிறோமோ இல்லையோ, சிலர் டீ குடித்தால் தான் நாளே தொடங்கும் என்பார்கள்.

ஒரு சிலர் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து டீ கூட அருந்துவார்கள். பேச்சுலர்களின் பல நாள் உணவாகவே இருந்துவருகிறது டீ.

இந்த தேநீரில் பல வகைகளும் இருக்கின்றன. பால் சேர்த்து அருந்தும் டீ, பால் இல்லாமல் தயாரிக்கப்படும் தேநீர், அதுமட்டுல்லாது, பிளாக், க்ரீன், ஆரஞ்சு என ஏகப்பட்ட ஃபிளேவர்களும் இதிலுண்டு.

தேநீர் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளில் பிரதானமான பானம்.

மேலும் இந்தியா தேயிலை ஏற்றுமதியில் டாப் 5 நாடுகளில் ஒன்று.

என்னதான் தேநீரை நாம் விரும்பி அருந்தினாலும், அதை அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலத்திற்கு ஆபத்து தான்.

நாளின் எந்த வேளையிலும் நீங்கள் டீ குடிப்பவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது.

குறிப்பாக மாலை நேரத்தில். மாலை வேளைகளில் தொடர்ந்து தேநீர் அருந்தினால் என்ன ஆகும், ஏன் அருந்தக் கூடாது என்பதை மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

தூக்கம் என்பது மனிதன் சீரான, சமமான உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக மிக முக்கியமான ஒன்று. அதிலும், நாம் நாளின் மற்ற வேலைகளில் உறங்குவதை விட, இரவில் உறங்குவது தான் முக்கியம்.

இந்த இரவு நேர தூக்கம் என்பது இன்றைய தேதியில் பலருக்கும் தேவையான அளவு கிடைப்பதில்லை. அப்படியிருக்க தேநீர் அருந்துவது நமது தூக்கத்தை கெடுக்கத்தான் செய்கிறது.

காரணம் இதிலுள்ள கஃபைன்கள். இந்த கஃபைன்கள், நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க டோபமைனை தூண்டிவிடுகிறது.

இதனால் மாலை நேரத்தில் டீ குடித்தால், நமது மூளை சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடனே இருக்கிறது.

குறைந்தது உறங்கப்போவதற்கு 7 மணி நேரம் முன்பாவது டீ குடிக்காமல் இருப்பது நல்லது.

இரவில் நமக்கு கிடைக்கும் நிம்மதியான தூக்கம் அழற்சி தடுப்பு, ஆரோக்கியமான செரிமானம், உடலில் உள்ள நச்சுகளை கல்லீரல் சுத்திகரிக்க என பல வகைகளில் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கண்டிஷன் காபி பிரியர்களுக்கும் பொருந்தும். காபிகளிலும் இந்த கஃபைன்கள் இருக்கின்றன.

மேலும், தேநீர் என்பதன் பொருள் தேயிலைகளை சூடான தண்ணீரில் கலந்து அருந்துவது தான். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது தேன் சேர்க்கலாம். பால் சேர்க்கும் வழக்கம் பிரிட்டன் போன்ற நாடுகளில் பெரும்பாலும் இல்லை.

தேநீரில் பால் மற்றும் சர்க்கரை சேர்ப்பதால் அதன் முழுமையான ஊட்டச்சத்தும் குறைக்கப்படுகிறது.

மிதமான கசப்பு சுவையுடன், பால் சேர்க்காத பிளாக் டீ அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது தான். ஆனால் அதையும் மாலை நேரத்தில் அருந்தவேண்டாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?