Dead Twitter
இந்தியா

இறந்த மகனின் சடலத்தோடு நான்கு நாட்கள் வாழ்ந்த தந்தை - என்ன நடந்தது?

Keerthanaa R

மொஹாலியில், இறந்த தன் 34 வயது மகனின் சடலத்துடன், அவரது தந்தை நான்கு நாட்கள் வீட்டில் அடைப்பட்டு இருந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததில், விஷயம் வெளியே வந்துள்ளது.

82 வயதாகும் பல்வந்த் சிங் உடல் நலக் குறைவால் படுத்தப் படுக்கையாக இருந்ததால், மகன் சுக்வீந்தர் சிங் இறந்தபோதும், குரல் கொடுத்து மற்றவர்களுக்கு தகவல் கொடுப்பதற்கோ, அல்லது எழுந்து தானே மற்ற காரியங்களை செய்வதற்கோ இயலாத நிலை இருந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். விசாரணையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற பல்வந்த் சிங், மூன்று வயது சுக்வீந்தர் மற்றும் அவரது தங்கையை தத்து எடுத்து வளர்த்துவந்தார். பல்வந்த் சிங்கின் மனைவி இறந்துவிட்டார்.

சுக்வீந்தர் சிங் இறந்த இரண்டு நாட்களிலேயே துர்நாற்றம் வீசியுள்ளது. ஆனால், அக்கம் பக்கத்தினர் அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதே நிலை தொடரவே, முதலில் சுக்வீந்தரின் சகோதரிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சகோதரியின் கணவர் பால் சிங் அங்கு வந்து முதலில் வீட்டின் கதவை தட்டிப்பார்த்துள்ளார்.

உள்ளே படுத்திருந்த பல்வந்த் சிங், கேட்கும் கேள்விகளுக்கு ஆம் இல்லை என்ற பதில்களை மட்டுமே அளித்துள்ளார். அதன் பிறகு பால் சிங் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சுக்வீந்தரின் மரணத்தில் தற்போது வரை எந்த சந்தேகமும் இல்லை எனவும், அது இயற்கை மரணம் தான் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, மேலும் விசாரணை தொடரும் என்றும், பல்வந்த் சிங் தற்போது பேச இயலாத நிலையில் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?