Old man  Representation
இந்தியா

"என் பிணத்தை கூட கொடுக்காதீர்கள்" - 1.5 கோடி சொத்தை அரசுக்கு எழுதி வைத்த முதியவர் - ஏன்?

Antony Ajay R

தனது மகனும் மருமகளும் தன்னைப் பல இடங்களில் அவமானப்படுத்தி, முதியோர் இல்லத்தில் தங்க வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார் முதியவர் ஒருவர்.

தனது குடும்பத்தினர் மீதான வருத்தம் காரணமாக உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் செய்துள்ள செயல் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

80 வயது மனிதரான நாது சிங், கடோலி நகரத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

அவரது மொத்த சொத்தையும் உத்தரபிரதேசம் அரசுக்கு கொடுப்பதாக உயில் எழுதிவைத்துள்ளார்.

அவரது சொத்துக்களின் மதிப்பு 1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விலைமதிப்பு மிக்க வீட்டில் பள்ளிக்கூடம் அல்லது மருத்துவமனை அமைக்க வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் நாது சிங், "என் பிணத்தைக் கூட மகனிடம் கொடுக்க வேண்டாம்" எனக் கூறியதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.

வீடு மட்டுமல்லாமல் நாது சிங்கிற்கு கிராமத்தில் பெரிய அளவில் விவசாய நிலம் உள்ளது.

தனது பிள்ளைகள், மருமகள் மீதான வருத்தம் காரணமாக நாது சிங் எடுத்துள்ள நடவடிக்கை கவனம் பெற்று வருகிறது.

பலரும் அவரது முடிவு சரியானது என்றும் பிள்ளைகளுக்கு பாடமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?