ஒரே வீடு இரு வேறு மாநிலங்களில்! எப்படி ?
ஒரே வீடு இரு வேறு மாநிலங்களில்! எப்படி ? ட்விட்டர்
இந்தியா

ஒரே வீடு, இரு வேறு மாநிலங்களுக்கு சொந்தம்: எப்படி சாத்தியம்? ஆச்சரியமூட்டும் தகவல்

Keerthanaa R

ஒரே வீடு இரு வேறு மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்த செய்தி படிப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நம்மை சுற்றி பல அதிசயங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில், ஒரே வீடு தெலங்கானா - மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களின் இடையில் அமைந்துள்ளது.

மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லை பிரச்னை சற்று தீவிரமடைந்து, இரு மாநில தலைவர்களும் உள்துறை அமைச்சரை சந்தித்து இதற்கு தீர்வு காண முனைப்புடன் இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம், மகாராஷ்டிரா - தெலங்கானா இடையே எல்லை பிரச்னை வந்துவிடும் போல இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மகராஜ்கூடா கிராமத்தில் ஒரு வீடு அமைந்திருக்கிறது. இது மகாராஷ்டிரா - தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்திருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன தான் எல்லை பிரச்னைகள் குறித்து எல்லாம் பேசினாலும் , இது வீட்டின் உரிமையாளருக்கு ஒரு பிரச்னையாக இருப்பதாக தெரியவில்லை.

காரணம், மகாராஷ்டிரா தெலங்கானா என இரு மாநிலத்தில் அறிவிக்கப்படும் நலத்திட்டங்களையும் அவர் அனுபவிக்கிறார்.

இந்த வீட்டின் உரிமையாளர் உத்தம் பவார். அவரது வீட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. அதில் நான்கு அறைகள் தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது.

அதில் சமையல் அறையும் அடங்கும். மீதமுள்ள அறைகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தது.

பவார் இதுகுறித்து பேசுகையில், ”12, 13 பேர் இந்த வீட்டில் வாழ்கிறோம். என் வீட்டின் சமையலறை தெலங்கானாவில் உள்ளது” என்றார். 1969ல் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் இந்த வீட்டின் ஒரு பாதி மகாராஷ்டிராவில் அமைந்துள்ளதும், மற்றொரு பாதி தெலங்கானாவில் அமைந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

“இதனால் இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. நாங்கள் இரு மாநில கிராம பஞ்சாயத்துக்கும் வரி செலுத்தி வருகிறோம். மேலும் தெலங்கானா அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை அதிகமாகவே அனுபவித்து வருகிறோம் என்றார் உத்தம் பவார்”

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?