Kangana Ranaut Twitter
இந்தியா

அக்னிபத் திட்டம் - இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பாராட்டிய நடிகை கங்கனா

Priyadharshini R

ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்காக அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 40,000 இளைஞர்கள் 90 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட்டு, 6 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு, சேவையின் செயல்திறன் அடிப்படையில் 25 சதவீத வீர்களை மட்டும் ராணுவ பணியில் அமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

PM modi

அதே சமயத்தில் இந்த திட்டம் கொண்டு வந்ததற்காகப் பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரணாவத் பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சியைக் கட்டாயமாக்கி இருக்கிறது.

Kangana Ranaut

ஒழுக்கம், தேசியவாதம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளவும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது என்றால் என்ன என்பது பற்றி கற்றுக் கொள்ளவும் சில ஆண்டுகள் ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

அந்தவகையில் அக்னிபத் திட்டம், தொழில் வாழ்க்கையைக் கட்டமைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டது' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?