உயிர்காத்த நண்பனிடம் இருந்து கொக்கை பிரித்த அரசு; கண்ணீர் விட்ட ஆரிஃப் - என்ன நடக்கிறது? Twitter
இந்தியா

உயிர்காத்த நண்பனிடம் இருந்து கொக்கை பிரித்த அரசு; கண்ணீர் விட்ட ஆரிஃப் - என்ன நடக்கிறது?

Antony Ajay R

தனது உயிரைக் காப்பாற்றிய ஒருவருடன் நெருக்கமாக பழகிவந்த பறவையை உத்தரபிரதேச மாநில அரசு வலுக்கட்டாயமாக பிரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆரிஃப் என்ற நபர் கடந்த ஆண்டு வயலில் அடிபட்டுக் கிடந்த கொக்கு ஒன்றுக்கு சிகிச்சை அளித்து கவனித்துள்ளார்.

அவரது அன்பினால் அவரை விட்டு பிரிய மனமில்லாத கொக்கு அவரையே சுற்றிசுற்றி வந்துள்ளது.

ஆரிஃப் மற்றும் கொக்கின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இப்போது ஆரிஃப் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கண்கலங்க அதில், "என் நண்பனை வலுக்கட்டாயமாக வனத்துறையினர் எடுத்து செல்கின்றனர். என்னை தயவு செய்து காப்பாற்றுங்கள்" என்றுப் பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஆரிஃப் மற்றும் அவரது நண்பனைக் குறித்து தகவலை அறிந்துகொண்ட உத்தரபிரதேச எதிர்கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் பார்வையிட்டு கொக்குடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில் கொக்கை வனத்துறையினர் பறிமுதல் செய்வதனை கடுமையாக விமர்சித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

"மாநில பறவையான நாரையை விடுவிக்கிறோம் என்ற பெயரில் அதனைப் பராமரித்து வருபவர்களிடம் இருந்து பறித்துள்ளது பாஜக அரசு. தேசிய பறவையான மயிலுக்கு தீவனம் அளிப்பவர்களிடம் இருந்து விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பொருத்திருந்துப் பார்க்க வேண்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று வனத்துறையினர் பறிமுதல் செய்த கொக்கு காணவில்லை எனக் கூறியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

"பா.ஜ.க அரசு உடனடியாக நாரையை கண்டுபிடிக்க வேண்டும், இல்லையெனில் உலக பறவை ஆர்வலர்கள் கொந்தளிப்பார்கள்." என ட்வீட் செய்துள்ளார்.

"மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலோ அல்லது மனிதனுக்கு பறவைக்கும் இடையிலோ.... அன்பை ஒருபோதும் பாஜக விரும்புவதில்லை. பிறருக்கு துக்கத்தைக் கொடுத்து அந்த துக்கத்தினால் சிரிப்பவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது" என்றும் ட்வீட் செய்துள்ளார்.

ஆரிஃப் மற்றும் கொக்கு

ஆரிஃப் ஒரு நாள் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் பலவீனமாக கிடந்த சரஸ் கொக்கு ஒன்றைப் பார்த்துள்ளார்.

அந்த கொக்குக்கு மனிதாபிமானத்துடன் உதவ முடிவு செய்துள்ளார்.

அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று காயங்களுக்கு மருந்து வைத்து உணவும் கொடுத்துள்ளார்.

கொக்கு நலமானதும் அதனுடைய நண்பர்களுடன் பறந்துவிடும் என ஆரிஃப் நினைத்துள்ளார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

கொக்கு மற்ற கொக்குகளுடன் இருப்பதை விட தனக்கு உதவிய ஆரிஃப் உடன் இருப்பதையே விரும்பியிருக்கிறது.

இதனால் எப்போதும் ஆரிஃப் இருக்கும் இடத்திலேயே கொக்கும் இருந்துள்ளது. அவர் சாலையில் செல்லும் போது நிழல் போல் பின் தொடர்ந்து சென்றிருக்கிறது.

சில நேரங்களில் 40 கிலோமீட்டர் கூட சலிக்காமல் பறந்து சென்று ஆரிஃபைப் பார்க்குமாம் கொக்கு.

ஒரு வேளை ஆரிஃப் எங்காவது வெளியில் சென்றால் சோகமடையும் கொக்கு, அவருக்காக காத்திருக்குமாம். அவர் வந்த பின்னர் சந்தோஷமாக பறக்குமாம்.

"அவனது நண்பர்கள் அவனை அழைத்துச் செல்ல அவ்வப்போது வந்தாலும் அவன் போவதில்லை. வராண்டாவில் ஒளிந்துகொள்வான்.

அவர்களுடன் விளையாட சென்றாலும் மாலையில் திரும்ப என்னிடம் வந்துவிடுவான்." என கொக்கு குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார் முகமது ஆரிஃப்.

அவர் தோள் மீது வந்து அடிக்கடி இந்த பெரிய கொக்கு உட்காந்துக்கொள்கிறது.

இந்த அழகான நண்பர்களுடடையக் கதை இப்படி சோகமான சூழலை சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?