வைரஸ் போல இரண்டு கைகளாலும் எழுதும் மாணவர்கள் - அதிசய பள்ளி பற்றிய ஆச்சரியத் தகவல்கள்! Twitter
இந்தியா

வைரஸ் போல இரண்டு கைகளாலும் எழுதும் மாணவர்கள் - அதிசய பள்ளி பற்றிய ஆச்சரியத் தகவல்கள்!

Antony Ajay R

நண்பன் படத்தில் வரும் வைரஸ் (சத்யராஜ்) போல இரண்டு கைகளாளும் எழுதும் திறமைப்படைத்தவர்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு பள்ளியே இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

மத்தியபிரதேசம் மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் இருக்கிறது வீணா வதினி பள்ளி. இந்த பள்ளியில் உள்ள குழந்தைகள் தான் இரண்டு கைகளாலும் எழுதும் வினோத திறமையைக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் பள்ளி நோட்டு புத்தகங்களில் எழுத இரண்டு கைகளையும் உபயொகிப்பதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் தேர்வுகளில் கூட அவர்களால் விரைவாக எழுத முடிகிறது.

வீணா வதினி பள்ளியில் மொத்தமாக 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் உபயோகித்து வேகமாக எழுத பழகிக்கொண்டுள்ளனர். இவர்கள் 3 மணிநேர தேர்வை ஒன்றரை மணிநேரத்தில் எழுதி முடிக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த மாணவர்களால் இந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், அரபு மற்றும் ரோமன் என ஆறு மொழிகளால் எழுத முடியும்.

இரண்டு கைகளால் எழுதுவது எப்படி சாத்தியமானது?

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் பிபி ஷர்மா தான் மாணவர்களிடம் இந்த திறமை வளர காரணமாக இருந்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் இதுபோல இரண்டு கைகளாலும் எழுதும் திறனைப் பெற்றிருந்தார் என்பதைக் கேள்விப்பட்ட ஷர்மா தனது மாணவர்களுக்கும் இதனைப் பழக்கி உள்ளார்.

மாணவர்களுக்கு இந்த பழக்கம் படிப்படியாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. பள்ளியில் சேரும் குழந்தை முதலில் ஒரு கையில் எழுத கற்றுக்கொள்கிறார். அடுத்த மாதத்தில் மற்றொரு கையிலும் எழுத கற்றுக்கொள்கிறார். தொடர்ந்து இரண்டு கைகளாலும் எழுத ஆரம்பித்துவிடுகிறார்.

45 நிமிட வகுப்பில் 15 நிமிடம் இரண்டு கைகளாலும் எழுத கற்றுக்கொடுக்கிறார் பிபி ஷர்மா.

இரு கைகளாலும் எழுதுவதன் நன்மைகள் என்ன?

இரண்டு கைகளாகலும் எழுதும் மாணவர்களுக்கு இரண்டு புற மூளையும் சிறப்பாக செயல்படும். இதனால் சிந்தனையும் நினைவாற்றலும் வளரும் எனக் கூறுகின்றனர்.

இது மாதிரியான இரு கைகளாலும் எழுதும் திறமை 1% மனிதர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பிரசாத் மட்டுமல்லாமல் லியோனார்டோ டா வின்சி, பென்சமின் பிராங்க்ளின், நிக்கோலா டெஸ்லா மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபல அறிஞர்களும் இரு கைகளாலும் எழுதும் திறன் கொண்டவர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?