ஆனந்த் மஹிந்திரா Twitter
இந்தியா

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த 47 வருட பழைய புகைப்படம் - இணையத்தில் வைரல்

Keerthanaa R

ஆனந்த் மஹிந்திரா 47 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இந்தியாவின் போற்றப்படும் தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் மக்களுக்காக ஆற்றும் தொண்டுகளின் மூலம், இவரது எளிமை மற்றும் இன்றைய தலைமுறையினருக்கு நிகரான சிந்தனை, நகைச்சுவை குணங்களால் இளைஞர்களின் மனதில் நிலைத்திருப்பவர்.

டிவிட்டரில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா இப்போதும் தான் பகிர்ந்த ஒரு புகைப்பத்திற்காக பேசப்பட்டு வருகிறார்.

1975ல் ஸ்பெயின் நாட்டில் ஸ்டூடென்ட் ஃபோடொகிராஃபி பிராஜெக்ட் செய்துகொண்டிருக்கும்போது இவர் எடுத்தப் புகைப்படம் தான் அது. இந்த 47 வருடப் பழைய புகைப்படத்தை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "இன்று 5ஜி நெட்வர்க் உலகத்தையே ஆள்கிறது...ஆனால் இந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிகச் சிறந்த தகவல் தொடர்பு கருவி எதுவென்று நினைவுக்கு வந்தது. மக்கள் ஒருவரோடு ஒருவர் நேரில் பேசுவது..." என தலைப்பிட்டிருந்தார்.

ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படக் கலையை பார்த்து நெட்டிசன்கள் வியப்புக்குள்ளாகியுள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?