இந்த மருத்துவர்கள் அனைவரும் மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் சேவைகளை வழங்கி வருகின்றனர். Twitter
இந்தியா

ஆந்திரப் பிரதேசம்: ஒவ்வொரு மூன்று குடும்பத்திற்கும் ஒரு மருத்துவர் - ஓர் அடடே கிராமம்

Priyadharshini R

மருத்துவர்களை கண்ணுக்கு தெரிந்த கடவுளாக மக்கள் பார்க்கிறார்கள். மருத்துவராக வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும்.

சிலருக்கு காலப்போக்கில் அது கனவாகவே போகிவிடும். ஒரு ஊருக்கு ஒருவராவது மருந்துவராக வேண்டும் என்ற நிலையை மாற்றியுள்ளனர் கனுகுலவலசை கிராம மக்கள்.

இங்கு ஒவ்வொரு மூன்று குடும்பத்திற்கும் ஒரு மருத்துவர் உருவாகிறார்.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கனுகுலவலசை கிராமம் ஒரு காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக மற்றவர்களை சார்ந்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலையெல்லாம் மலையேறிவிட்டது.

கனுகுலவலசா கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆந்திரா முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஐம்பது வருடங்களில் இந்த கிராமத்தில் சுமார் 150 மருத்துவர்கள் உருவாகியிருக்கின்றனர்.

இந்த மருத்துவர்கள் அனைவரும் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய நகரங்களில் முகாமும் அமைத்தும் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

நுழைவாயிலில் மருத்துவர் சிலை

பொதுவாக எந்த ஒரு நகரத்திலும், கிராமத்திலும், நகரத்திலும் சுதந்திரப் போராட்ட வீரர் முதல் சாமி வரை சிலை வைப்பது வழக்கம். ஆனால் கனுகுலவலசை கிராமத்தின் பார்வை சற்று வித்தியாசமானதாக உள்ளது.

இங்கு கிராமத்தின் நுழைவாயிலில் மருத்துவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. ராஜமுந்திரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்த உள்ளூர் மருத்துவர் பெண்டி சதீஷுக்கு இங்குள்ள மக்கள் சிலை நிறுவியுள்ளனர்.

கிராம தலைவர் பொட்டேபள்ளி நாராயணராவ் இது குறித்து கூறுகையில், "எங்கள் கிராமத்தில் மருத்துவக் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம். மருத்துவத் தொழிலில் எங்களுக்குப் பேரார்வம். விபத்தில் இறந்த இளம் மருத்துவரின் சிலையை நிறுவ இந்த ஆர்வம் எங்களைத் தூண்டியது" என்கிறார்.

ஸ்ரீகாகுளம் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் 450 குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு மூன்று குடும்பத்திற்கும் ஒரு மருத்துவர் உருவாகிறார்.

கிராம தலைவர் நாராயணராவ் கூறியதாவது,

"கிராமத்தில் உள்ளவர்கள் மருத்துவர்களை கடவுளாக கருதுகின்றனர். 1970கள் வரை நல்ல மருத்துவ வசதி இல்லாததால் பலர் இறந்தனர். ஆனால் கிராமத்து இளைஞர்கள் பலர் மருத்துவர்களாக மாறிய பிறகு நிலைமை மாறிவிட்டது.

அன்றிலிருந்து இன்று வரை கிராமத்தில் இச்செயல் தொடர்கிறது. இங்கு மாணவர்களின் முதல் விருப்பம் எம்பிபிஎஸ் படித்து டாக்டர் ஆவதுதான்" என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?