தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? தீபாவளி பற்றிய 6 புராணக் கதைள்
தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? தீபாவளி பற்றிய 6 புராணக் கதைள் Twitter
இந்தியா

தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? இந்து பண்டிகை பற்றிய 6 புராணக் கதைள்

Priyadharshini R

தீபாவளி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12 அன்று வருகிறது. இந்த தீபாவளி திருநாள் பல புராணக் கதைகளில் வேரூன்றியுள்ளது.

தீபாவளியன்று ஒளிரும் ஆயிரக்கணக்கான விளக்குகள் தீமையை நீங்க செய்து நன்மையை பிரதிபலிக்கிறது.

மற்ற பாரம்பரிய பண்டிகைகளைப் போலவே, தீபாவளிக்கும் பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

அயோத்திக்கு ராமர் திரும்புவது

தீபாவளி முக்கியமாக ராமருடன் தொடர்புடையது. தீபாவளியன்று, ராமர், சீதா மற்றும் லட்சுமணன் ஆகியோர் 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு அயோத்திக்குத் திரும்பினர் என்று நம்பப்படுகிறது. அவர்களை வரவேற்கவும், அவர்கள் திரும்பி வருவதைக் கொண்டாடவும், அயோத்தி மக்கள் தீபங்களை ஏற்றியதாக புராணங்கள் சொல்கிறது.

கிருஷ்ணரின் வெற்றி

மற்றொரு பிரபலமான இந்து புராணத்தின் படி, தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வரும் நரகா சதுர்தசி அன்று கிருஷ்ணர் அரக்க அரசன் நரகாசுரனைக் கொன்றார். இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், மக்கள் பட்டாசு வெடித்தும், வண்ண விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாடினர்.

லட்சுமி தேவியின் வழிபாடு

செல்வம் மற்றும் செழிப்புக்கான இந்து தெய்வமான லக்ஷ்மி தேவியை வழிபடும் நேரம் தான் தீபாவளி என்கின்றனர்.

அதிர்ஷ்டத்திற்காக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தீபாவளியன்று லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானை ஒன்றாக வழிபடுகின்றனர். லட்சுமி தேவியை வழிபட்ட பிறகு பல புதிய தொழில் முயற்சிகள் தொடங்கப்படுகின்றன.

பாலி மன்னரின் கதை

இந்தியாவின் சில பகுதிகளில், தீபாவளி அரக்கன் பாலி மற்றும் விஷ்ணுவின் கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாலி மன்னன் ஒரு தாராள மனப்பான்மை கொண்ட ஆட்சியாளர். மகாவிஷ்ணு ஒரு குள்ள பிராமணனாக உருவெடுத்து பாலி மன்னனிடம் நிலம் கேட்கச் சென்றார். தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற பாலி மன்னர் ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு, தனது வாமன் அவதாரத்தில், பூமி முழுவதையும் மூன்று படிகளால் மூடினார். பாலி மன்னரைக் பூமியை விட்டு வேறு இடத்திற்கு தள்ளினார். ஆனாலும் பாலி மன்னரின் நற்பண்புகளால் மகிழ்ச்சியடைந்த விஷ்ணு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் பூமிக்கு திரும்பும் வரத்தை வழங்கினார். இது தீபாவளிக்கு அடுத்த நாள் பாலி பிரதிபதா அல்லது பத்வா என்று கொண்டாடப்படுகிறது.

யமா மற்றும் யமுனாவின் புராணக்கதை

தீபாவளியின் நான்காவது நாள் பாய் தூஜ் என்று அனுசரிக்கப்படுகிறது. புராணத்தின் படி, மரணத்தின் கடவுள் யமா இந்த நாளில் தனது சகோதரி யமுனாவை சந்தித்தார். யமுனா அவரை சிறப்பு அலங்காரத்துடன் வரவேற்று நெற்றியில் திலகமிட்டார். அவளது அன்பினாலும் பக்தியினாலும் தொட்ட யமன், இந்த நாளில் தங்கள் சகோதரியிடமிருந்து திலகம் பெறுபவர் நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியையும் பெறுவார் என்ற விருப்பத்தை அவளுக்கு வழங்கினார். இந்த நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது.

புத்தரின் ஞானம்

பௌத்தர்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக நேபாளத்தில் உள்ள நெவார் பௌத்தர்கள், தீபாவளியில் வரும் அமாவாசை அன்று பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியதாக நம்பப்படுவதால், தீபாவளியை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கொண்டாடுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?