வீட்டில் துளசி செடியை வளர்க்க எளிமையான டிப்ஸ்!
வீட்டில் துளசி செடியை வளர்க்க எளிமையான டிப்ஸ்! Canva
இந்தியா

வீட்டில் துளசி செடியை வளர்க்க எளிமையான டிப்ஸ்!

Priyadharshini R

துளசியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சளி மூச்சு திணறல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் துளசி சாப்பிடுவது நன்மை தரும்.

வீட்டில் துளசி வளர்க்க

ஆரோக்கிய நன்மை மற்றும் மத ரீதியான புனித தன்மை காரணமாக வீட்டில் துளசி வளர்க்கப்படுகிறது. துளசி செடி வளர்க்கும் போது நிறைய சிக்கல்களை மக்கள் சந்திக்கின்றனர்.

துளசி செடியை வீட்டில் வைக்கும் போது சீக்கிரம் காய்ந்து விடுகிறது அல்லது பெரிய அளவில் வளர வில்லை என்று பலர் கூறி கேள்விப்பட்டிருப்போம், அவர்களுக்கான டிப்ஸ் தான் இது!

ஆரோக்கியமான துளசி செடியா?

துளசி செடி வைக்கும் போது ஆரோக்கியமான துளசி செடியா என்பதை பார்த்து அதை தொட்டியில் வைத்து வளர்க்கவும். ஆரோக்கியமான செடி நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்கும்.

எங்கே வைப்பது?

வீட்டில் ஓரளவு வெயில் உள்ள இடத்தில் துளசிச் செடியை வைக்கவும். தொட்டியில் வைத்தாலும் நிலத்தில் வைத்தாலும் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்கவும்.

எப்போது தண்ணீர் விட வேண்டும்?

துளசி செடி வளர ஈரப்பதமான மண் தேவைப்படும். அதனால் நீங்கள் வைக்கும் துளசிச் செடியின் மேல் அடுக்கு மண் காயும் வேளையில் நீரூற்றவும்.

அதேவேளை அதிகமாக நீர் ஊற்றினால் துளசி பட்டு போகவும், அழுகவும் வாய்ப்புள்ளது. அதையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கிளைகள் விட்டு வளர உதவும்

துளசி செடி ஆரோக்கியமாக நன்றாக வளர முக்கிய டிப்ஸ், அதன் இலைகளை அவ்வப்போது நீக்குவது. தினசரி பயன்பாட்டின் போது இது சாதாரணமாகவே செய்யலாம்.

அப்படி தினசரி இலைகளை பறிக்காத போது, அதிகப்படியான இலைகள் வந்தவுடன் அதை பறித்து விடுங்கள். இது கிளைகள் விட்டு வளர உதவும்.

அதிக சத்து

தினசரி நீர் ஊற்றினாலும் வாரத்துக்கு இரண்டு முறை அரிசி களைந்த நீர் அல்லது வாழைத்தோல் ஊறிய நீரை துளசி செடிக்கு ஊற்றுவது அதிக சத்துக்களை செடிக்கு சேர்க்கும்.

வெயில் காலம் அதிகமாக இருக்கும் போது துளசி செடிக்கு விடும் நீர் விரைவாக காய்ந்து போக வாய்ப்புள்ளது. அது போன்ற நேரங்களில் காய்ந்த இலை, செடிகளின் குப்பைகளையும் அந்த மண்ணின் மீது போடுவது நல்லது.

ஒரு துளசி செடி மட்டுமல்லாது நிறைய துளசி செடி வைக்க விரும்பினால் துளசி செடி பூவிட்டு, விதை வரும் நேரத்தில் அதை பக்கத்தில் இன்னொரு தொட்டியில் தூவி வளர்க்கலாம்.

செடி வளர வளர அதன் வேர்கள் விரிய அதிக இடம் தேவைப்படும். அதனால் துளசி செடி வைத்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதை வேறொரு பெரிய அளவிலான தொட்டிக்கு மாற்றவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?