Gateway of India, Mumbai Twitter
இந்தியா

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஐந்து புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் பற்றி தெரியுமா?

வரலாற்று முக்கியத்துவம், அரசியல் முக்கியத்துவம், எல்லாமே மணல் மற்றும் கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தை ஒரு நினைவுச் சின்னமாக மாற்றுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்ட சில பிரபலமான கட்டிடங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

Priyadharshini R

வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்கள் நினைவுச்சின்னங்களைப் பார்வையிடவும் அதன் பின்னாலிருக்கும் கதைகளை ஆராயவும் விரும்புகிறார்கள்.

வரலாற்று முக்கியத்துவம், அரசியல் முக்கியத்துவம், எல்லாமே மணல் மற்றும் கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தை ஒரு நினைவுச் சின்னமாக மாற்றுகிறது.

இந்தியாவை பல ஆட்சியாளர்கள் ஆண்டனர். குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அவர்களின் அரசாங்கத்தால் கட்டப்பட்ட சில பிரபலமான கட்டிடங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

மும்பை உயர்நீதிமன்றம்

விக்டோரியா மகாராணி வழங்கிய லெட்டர்ஸ் காப்புரிமை மூலம் இந்தியாவில் பிரசிடென்சி டவுன்ஸில் நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் மும்பை உயர் நீதிமன்றமும் ஒன்று. மும்பை உயர் நீதிமன்றத்திற்கான கட்டுமானப் பணிகள் 1871 இல் தொடங்கப்பட்டன. இது பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் ஜேம்ஸ் ஏ. புல்லர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

கேட்வே ஆஃப் இந்தியா

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது இந்த நினைவு சின்னம். பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். இந்தியாவிற்கு வருகைபுரிந்த முதல் பிரிட்டிஷ் மன்னர் என்பதன் நினைவாக இது கட்டப்பட்டது.

இந்த நினைவுச்சின்னம் இந்தோ-இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டது. கேட்வே ஆஃப் இந்தியாவை வடிவமைத்தவர் ஜார்ஜ் விட்டட்.

பின்னர், இது முக்கியமான பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளுக்கு இந்தியாவுக்கான நுழைவின் அடையாளமாக மாறியது.

விக்டோரியா மெமோரியல், கொல்கத்தா

மத்திய கொல்கத்தாவின் மைதானத்தில் ஒரு பெரிய பளிங்கு கட்டிடம் உள்ளது. அது தான் விக்டோரியா நினைவகம். இது 1906 - 1921க்கு இடையில் கட்டப்பட்டது. இது விக்டோரியா மகாராணியின் நினைவாக கட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 1901 இல் விக்டோரியா மகாராணியின் மறைவுக்குப் பிறகு, கர்சன் பிரபு மகாராணிக்கு ஒரு நினைவிடம் கட்ட பரிந்துரைத்தார். வில்லியம் எமர்சன் என்பவரால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.

இந்தியா கேட், டெல்லி

போர் நினைவு சின்னமாக இப்போது நிற்கும் இந்தியா கேட், அனைத்து மகத்தான வீரர்களின் தியாகத்தையும் நினைவுக்கூருகிறது.

இது 1918 ஆம் ஆண்டு போர் கல்லறையாகவும், முதலாம் உலகப் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாகவும் கட்டப்பட்டது. இது புது டெல்லியின் முக்கிய கட்டிடக் கலைஞராக இருந்த சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

ராஷ்டிரபதி பவன்

தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டபோது ராஷ்டிரபதி பவன் பிரிட்டிஷ் ஆட்சியால் கட்டப்பட்டது. இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று ராஷ்டிரபதி பவன் (ஜனாதிபதி மாளிகை).

அரண்மனை கட்டுவதற்கான உத்தரவுகள் 1799 மற்றும் 1803 க்கு இடையில் வெல்லஸ்லி பிரபுவால் நிறைவேற்றப்பட்டது. 1912 ஆம் ஆண்டில், வங்காள ஆளுநர் கட்டிடத்தில் தங்கினார். இந்த கட்டிடமும் சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?