ஹரியானா : பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 9 முறை பரோலா?
ஹரியானா : பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 9 முறை பரோலா? Twitter
இந்தியா

ஹரியானா : பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 9 முறை பரோலா?

Antony Ajay R

ஹரியானாவைச் சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவராவார். இவரது ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே, கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங் வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால், ரஞ்சித்தை சிங்கை கொலை செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் அவருக்குஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரு, குர்மீத் ராம் ரஹீம் சிங் இதுவரை 9 முறை பரோல் பெற்றுள்ளார்.

கடந்த நவம்பர் 21, 2023-ல் அவருக்கு 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 2 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இன்று மீண்டும் அவருக்கு 50 நாட்காள் பரோல் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாய்க்கு உடல்நிலை சரியில்லை, தனக்கு உடல்நிலை சரியில்லை எனப் பல்வேறு காரணங்களைக் கூறி பலமுறை பரோல் பெற்றிருக்கிறார். கடந்த முறை பரோலில் வந்தவர் கிரிக்கெட் விளையாடியது, பட்டாகத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது உள்ளிட்ட வீடியோக்களை இணையத்தில் பரப்பி கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?