jammu kashmir Twitter
இந்தியா

காஷ்மீர் : பொட்டு வைக்க கூடாது; ஹிஜாப் அணிய கூடாது - 2 பெண் குழந்தைகளை தாக்கிய ஆசிரியர்

Priyadharshini R

ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி செயல்படுகிறது. அங்கு மதச் சின்னங்களான பொட்டு மற்றும் ஹிஜாப் அணிந்ததற்காக 2 பெண் குழந்தைகளைத் தாக்கியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது நான்காம் வகுப்பு மாணவிகள் - ஒருவர் நெற்றியில் பொட்டு வைத்து வந்துள்ளார், மற்றொருவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர். அம்மாணவிகளை வகுப்பு ஆசிரியரான நசீர் அகமது கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

Hijab issue

இந்து மற்றும் முஸ்லீம் ஆகிய மதத்தை சேர்ந்த இரு சிறுமிகளின் பெற்றோர்கள் கூட்டாக மாணவிகள் தாக்கப்பட்டது குறித்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் நெற்றியில் பொட்டு வைத்ததற்காகவும், ஹிஜாப் அணிந்ததற்காகவும் பெண் குழந்தைகள் தாக்கப்பட்டுள்ள விவகாரம் ஒரு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என்று தெரிவித்தனர். மேலும் பல மாநிலங்களில் வெடித்த ஹிஜாப் சர்ச்சை தற்போது ஜம்மு காஷ்மீரில் தலைத்தூக்கியுள்ளது என்று கூறினார்.

தனது பெண் குழந்தை தாக்கப்பட்டதற்கு நீதி வேண்டும் என்று தெரிவித்த அவர் உ.பி., பீகார், கர்நாடகா போன்று காஷ்மீர் மாற அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, ரஜோரி மாவட்ட நிர்வாகம் ஆசிரியருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து நசீர் அகமதுவை 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?