dead body home for 18 months Twitter
இந்தியா

”என் கணவர் கோமாவில் இருக்கிறார்” - 18 மாதங்கள் இறந்தவரின் உடலை வீட்டில் வைத்திருந்த மனைவி

Priyadharshini R

உத்திர பிரதேச மாநிலத்தில் இறந்து 18 மாதங்கள் ஆன பின்பும் கோமாவில் இருப்பதாகக் கருதி ஒரு அரசு அதிகாரியின் உடலை வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரிந்து வந்தார் விமலேஷ் தீக்ஷத். இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதயம் தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை சார்பாக சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் விமலேசின் மனைவி அவர் இறந்ததை ஏற்றுக் கொள்ள மறுத்து அவர் கோமாவில் உள்ளதாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.

தினமும் அவர் உடல் மேல் புனித நீரை தெளித்து அவர் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தித்துள்ளார். அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அவருடைய ஓய்வூதிய சான்றிதழ்கள் எதுவும் மேற்படி அடுத்த கட்ட நகர்வுக்கு நகராமல் இருந்ததால் கான்பூர் வருவாய் துறையினர் இது குறித்த விசாரிக்கும்படி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த விசாரணையின் போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி அதை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இது குறித்து விசாரிக்கும் போது அவருடைய மனைவி மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டுகளிலிருந்து அடிக்கடி வீட்டிற்கு ஆக்சிஜன் சிலிண்டரை அவர்கள் கொண்டுவந்துள்ளனர் என அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?