thief Twitter
இந்தியா

இறந்துவிட்டதாக அடக்கம் செய்த திருடன் - 9 மாதங்களுக்கு பின் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

Priyadharshini R

மத்தியபிரதேச மாநிலம் ஷதார்பூர் மாவட்டம் பமிதா பகுதியில் இரும்பு சார்ந்த கடையை நடத்தி வருபவர் சுதிர் அகர்வால். இவரது கடையில் சுனில் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி வாடிக்கையாளர் தர வேண்டிய பணமான 6 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை வாங்கி வரும்படி சுனிலிடம் சுதிர் கூறியுள்ளார். வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வாங்கிய சுனில் கடைக்கு வரவில்லை, இதனால் சந்தேகமடைந்த சுதிர் இது குறித்து போலீசிடம் புகார் அளித்தார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி ஹொடகர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்த ஆண் சடலம் மாயமான சுனில் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து அடக்கம் செய்துவிட்டனர்.

Evidence

இந்த நிலையில் சமீபத்தில் இரும்பு கடை உரிமையாளர் சுதிர் ஷதார்பூர் பகுதியில் உள்ள பக்தேஷ்வர் தஹம் கோவில் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் சுனில் போன்ற நபரை பார்த்துள்ளார், அருகில் சென்று நீ சுனில் தானே என்னிடமிருந்து திருடிய பணத்தைக் கொடு என சுதிர் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் நான் சுனில் தான். போலீஸ் அறிக்கையின் படி நான் உயிரிழந்துவிட்டேன். இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என சுனில் அவரை மிரட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சுனில் 9 மாதங்களுக்குப் பின் உயிருடன் இருப்பதாகவும், வேறு நபரின் உடலையே சுனில் குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர் என்றும் மீண்டும் இரும்புக்கடை உரிமையாளர் சுதிர் போலீசில் புகார் அளித்தார்.

investigation

இந்த புகாரை தொடர்ந்து சுனிலை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். பணத்துடன் தப்பிச்சென்ற சுனில் வேறு ஊரில் 9 மாதங்கள் வசித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுனிலின் குடும்பத்தினர் அடக்கம் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?