சைத்ரா - சிவகுமார் டிவிட்டர்
இந்தியா

விவாகரத்து வழக்கு முடிந்த சில நிமிடங்களில் மனைவியை கொலை செய்த கணவர் - எங்கே?

Keerthanaa R

விவாகரத்து வேண்டாம் எனக் கூறி மீண்டும் இணைந்து வாழ்வதாக முடிவெடுத்த சில நிமிடங்களில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த நபர் ஒருவர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருமணமாகி 7 வருடங்கள் கடந்திருந்த சிவகுமார் - சைத்ரா தம்பதி, விவாகரத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். கர்நாடகாவின் ஹொலெநரசிபுரா நீதிமன்றத்தில் இதற்காக கவுன்செலிங் மேற்கொண்டு வந்தனர். கடைசியாக கவுன்செலிங் முடித்த இருவரும் அவர்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை கடந்து, இணைந்து வாழலாம் என முடிவெடுத்துள்ளனர்.


இப்படி முடிவு செய்து நீதிமன்றத்திலிருந்து வெளி வந்த சில வினாடிகளிலேயே சிவகுமார் சைத்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கவுன்செலிங் முடிந்து கழிவறைக்கு சைத்ரா சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற சிவகுமார், அங்கு அவரை மறைத்துவைத்திருந்த கத்தியினால் கழுத்தை அறுத்துள்ளார்.

murder

அங்கிருந்து தப்பிக்க முயன்ற சிவகுமாரை மக்கள் சுற்றிவளைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சைத்ராவை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்றுவந்த சைத்ரா அதிக ரத்தப்போக்கின் காரணமாக உயிரிழந்தார்.

கொலை செய்த குற்றத்திற்காக சிவக்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவகுமார் எப்படி ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவந்தார் எனவும், இணைந்து வாழ முடிவெடுத்த பின்னர் கொலை செய்யும் அளவிற்கு மனதை மாற்றிய காரணம் என்னவென்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?