பத்து வருடங்களாக ஒரு கையை தூக்கியப்படியே வாழும் சாமியார் twitter
இந்தியா

பத்து வருடங்களாக ஒரு கையை தூக்கியப்படியே வாழும் சாமியார் - கூறும் விநோத காரணம் என்ன?

கையை தூக்கிய வண்ணமே தான் எல்லா வேலைகளையும் செய்து வருவதாகவும், உறங்கும்போதும் கூட அவர் கையை இறக்கியதில்லை எனவும் தெரிவித்தார்.

Keerthanaa R

பத்து வருடங்களாக தன் வலதுகையை தூக்கியபடியே இருக்கிறார் வட இந்தியாவில் வசிக்கும் சாமியார் ஒருவர். 

சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நம் கரங்களை நீட்டிய வண்ணம் வைத்திருந்தாலே நமக்கு வலி ஏற்படும். ஆனால் இங்கு ஒருவர் ஒரு  தசாப்த காலமாக  தூக்கிய தன் கையை இறக்காமலேயே வைத்திருக்கிறார். 

பெயர் குறிப்பிடப்படாத இந்த சாமியார், தான் கடவுள் மீது கொண்டுள்ள அதீத பக்தி மற்றும் அர்ப்பணிப்பை நிரூபிக்கவே இப்படி தனது வலக்கரத்தை தூக்கிய வண்ணம் இருப்பதாக குறிப்பிட்டார். எவ்வளவு நாட்கள் இப்படி கையை தூக்கி இருக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், அதை பற்றி நான் இன்னும் சிந்திக்கவில்லை என்றார்.

கையை தூக்கிய வண்ணமே தான் எல்லா வேலைகளையும் செய்து வருவதாகவும், உறங்கும்போதும்  கூட அவர் கையை இறக்கியதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இதனால் தனக்கு கஷ்டம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார். மேலும் தன் வலக்கையில் வலுவனைத்தும்  இழந்துவிட்டதாக அவர் கூறினார். 

இதற்கு முன்னர் சாது அமர் பாரதி என்ற சாமியார் ஒருவர் இப்படி வலக்கையை சுமார் 50 வருடங்களாக தூக்கியபடியே இருந்தது வைரலானது. 

1973ல் தனது இல்லற வாழ்க்கையை துறந்து, சிவ பக்தரானார் அமர் பாரதி. அப்போது சிவ பெருமானுக்கு தன் பக்தியையும் அர்ப்பணிப்பையும் நிரூபிக்க வேண்டும் என, தன் வலது கையை மேலே தூக்கியவாறு வைத்துக் கொண்டார். முதல் இரண்டு வருடங்கள் கையில் கடுமையான வலி இருந்ததாகவும், பின்னர் அவரது கை மறத்து போனதாகவும் அவர் தெரிவித்தார். 

தூக்கியே வைத்திருப்பதால் அவரது வலக்கரத்தின்0 ரத்த ஓட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கும் எனவும், இதனால், அவருக்கு வலி எதுவும் தெரியாமல் போயிருக்கலாம் எனவும் வல்லுநர்கள் விவாதிக்கின்றனர். 

தற்போது அமர் பாரதியை போலவே இவரும் கையை தூக்கிய வண்ணம் இருப்பது பலரது கவனத்தை கவர்ந்து வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?