Mumbai Airport: வீல் சேர் பற்றாக்குறையால் உயிரிழந்த முதியவர்! Twitter
இந்தியா

Mumbai Airport: வீல் சேர் பற்றாக்குறையால் உயிரிழந்த முதியவர்!

Antony Ajay R

நியூயார்கில் இருந்து மும்பை வந்த வயதான தம்பதியினர், வீல் சேர் பயணிகளாக தங்களை புக் செய்திருந்தனர். மனைவியுடன் வந்திருந்த 80 வயது முதியவர் கடந்த திங்கள் அன்று விமான நிலைய குடியேற்ற கவுண்டரில் நிலைகுலைந்து இறந்தார்.

விமான நிலையத்தில் தம்பதியினருக்கு ஒரு வீல் சேர் மட்டுமே இருந்துள்ளது. இதனால் மனைவியை வீல் சேரில் அமர வைத்துவிட்டு சுமார் 1.5 கிலோமீட்டர் அவரைப் பின்தொடர்ந்து நடந்துள்ளார் முதியவர்.

குடியேற்ற கவுண்டரில் இறந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தியர்களான அந்த தம்பதியனர் வந்த விமானத்தில் 32 வீல் சேர் பயணிகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் விமான நிலையத்தில் 15 வீல் சேர்களும் உதவியாளர்களும் மட்டுமே இருந்துள்ளனர்.

வீல் சேர் வழங்கப்படும் வரை காத்திருக்குமாறு பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முதியவர் மனைவியுடன் நடந்து வர முடிவு செய்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?