அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நித்யானந்தாவுக்கு அழைப்பு?  Twitter
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நித்யானந்தாவுக்கு அழைப்பு?

Priyadharshini R

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நித்யானந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது குறித்து என்டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து நித்யானந்தா எக்ஸ் தளத்தில்,

"வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்படுகிறார்.

முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்" என்று பதிவிட்டப்பட்டுள்ளது.

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்தியானந்தா, தற்போது கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். இந்த நிலையில் தான் நித்யானந்தா இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?