பிட்புல் canva
இந்தியா

சிறுவனை தாக்கிய பிட்புல் நாய் - 150 தையல்களுடன் மருத்தவமனையில் சிகிச்சை

Keerthanaa R

உத்திர பிரதேசத்தில் 10 வயது சிறுவனை பிட் புல் நாய் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் பிட்புல் நாய் வளர்ப்பவர்கள் சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது. இந்த நாயைச் செல்ல பிராணியாக வளர்ப்பதில் இருக்கும் ஓர் எதிர்மறை, இவ்வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. வளர்ப்பவர் என்று கூட பார்க்காமல் இவை கோபம் வந்தால் தாக்கி, உயிரைக் கூட மாய்த்துவிடும்.

இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் ஒரு 10 வயது சிறுவனை தாக்கியுள்ளது பிட் புல் நாய். காசியாபாத்தில் நடைபெற்ற இக்கோர சம்பவம், இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவர் அந்த சிறுவனை காப்பாற்ற முயன்றும், சிறிது நேரம் கழித்தே அவனை அவர்களால் நாயின் பிடியிலிருந்து விடுவிக்க முடிந்தது.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கன்னத்தில் 150 தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில் அவனை நான்கு நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இரு தினங்களுக்கு முன், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில், லிஃப்ட்டில் நாய்கள், இருவரை தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?